என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்க உள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அசத்திய வீரர்களின் இறுதிக்கட்ட விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 பிரிவுகளில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைச்சிறந்த வீரர் விருது, சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் விருது, சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது ஆகிய பிரிவுகளில் அவர் இடம் பிடித்துள்ளார்.

    10 ஆண்டின் தலைசிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் கோலியுடன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோரும் உள்ளனர்.

    சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் பட்டியலில் கோலி, ரோகித் சர்மா, டோனி (3 பேரும் இந்தியா), மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை), சிறந்த டெஸ்ட் வீரர் பட்டியலில் கோலி (இந்தியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்), சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது பந்தயத்தில் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), கோலி (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

    உத்வேகமிக்க வீரருக்கான விருது பிரிவில் கோலியுடன், டோனி, மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்) உள்பட 9 பேர் மல்லுகட்டுகிறார்கள்.

    இதே போல் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ் உள்பட 6 பேரும், சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ், கோஸ்வாமி உள்பட 6 பேரும் போட்டியிடுகிறார்கள்.

    32 வயதான விராட் கோலி நிறைய சாதனைகள் படைத்துள்ளார். மூன்று வடிவிலான போட்டியிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளை கணக்கிட்டால் டெஸ்டில் 7 ஆயிரத்திற்கு அதிகமாகவும், ஒரு நாள் போட்டியில் 11 ஆயிரத்திற்கு அதிகமாகவும், 20 ஓவர் போட்டிகளில் 2,500 ரன்களுக்கு மேலாகவும் குவித்து வியக்க வைத்துள்ளார். இதில் வாக்குப்பதிவு அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் 5 டெஸ்டுக்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். அதற்கு பதிலாக 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலாக 2 ஆட்டங்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
    மும்பை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தந்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அந்த போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. “5 டெஸ்டுக்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். அதற்கு பதிலாக 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலாக 2 ஆட்டங்கள் (மொத்தம் ஐந்து 20 ஓவர் போட்டி) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மூன்று ஒரு நாள் போட்டியில் மாற்றம் இல்லை. இந்த தொடரை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இது இரு நாட்டு தொடர் என்பதால் கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது எளிது என்று கூறிய கங்குலி கடந்த 4½ மாதங்களில் மட்டும் ஐ.பி.எல்., கிரிக்கெட் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளின் போது மொத்தம் 22 முறை தன்னை கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி கொண்டதாகவும், ஒரு முறை கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. 14-வது ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே அதிகமான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் பேட்டியின் போது கங்குலி கூறினார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது. முதல் நிமிடத்திலேயே சென்னை அணி கோல் கணக்கை தொடங்கி அட்டகாசப்படுத்தியது. அந்த அணி வீரர் இஸ்மா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அனிருத் தபா அருமையாக அடித்து கோலாக் கினார். ஐ.எஸ்.எல். வரலாற்றில் சென்னை அணியின் அதிவேக கோல் இதுவாகும்.

    25-வது நிமிடத்தில் கோல் எல்லைக்குள் வைத்து சென்னை அணி வீரர் சாங்டேவை, ஜாம்ஷெட்பூர் வீரர் ஐசக் தள்ளிவிட்டார். இதனால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சென்னை அணி வீரர் இஸ்மா பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தார். இதனால் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதைத் தொடர்ந்து பதில் கோல் திருப்ப ஜாம்ஷெட்பூர் அணி தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் காட்டியது. 37-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் ஜாக்கி சந்த் சிங் தூக்கி அடித்த பந்தை சக வீரர் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி அபாரமாக கோலுக்குள் அனுப்பினார். பிற்பாதியில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் வரிந்துகட்டி நின்ற போதிலும் பல வாய்ப்புகள் மயிரிழையில் நழுவி போயின. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

    இன்று (புதன்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் உடற்தகுதியை நிரூபித்து உடனடியாக ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு இல்லாததால் முதல் இரண்டு டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது.

    முதல் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பி விடுவார். ஐபிஎல் தொடரின்போது காயத்திற்கு உள்ளான ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால் காயம் சரியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா செல்பவர்கள் 14 நாட்கள் கோரன்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

    17-ந்தேதி போட்டியில் பங்கேற்க வேண்டுமென்றால் டிசம்பர் 3-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றிருக்க வேண்டும். 3-ந்தேதி சென்றடைந்தாலும் டெஸ்ட் போட்டியில் நேரடியாக கலந்து கொள்வது கடினம். ரோகித் சர்மா டிசம்பர் 8-ந்தேதி புறப்பட தேசிய அகாடமி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்படி 8-ந்தேதி புறப்பட்டால் 9-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி அல்லது 23-ந்தேதி வரை கோரன்டைனில் இருக்க வேண்டும். அதற்குள் முதல் டெஸ்ட் முடிந்துவிடும். 2-வது டெஸ்டிற்கு தயாராக ஒருவார பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது கடினம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கசிந்துள்ளன.

    ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் இந்த இரண்டு அனுபவ வீரர்களும் இடம் பெறாவிடில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.
    இந்தியாவிடம் முதன்முறையாக டெஸ்ட் தொடர் தோற்றுவிட்டோமே என்ற எண்ணம் இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்ற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெய்ன் இருந்தார். இந்தியாவுக்கு எதிரான தோல்வியை டிம் பெய்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் தொடங்கும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார்.

    டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டிம் பெய்ன், 2018 தோல்வி இன்னும் நச்சரித்துக்கொண்டு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்ததில் இருந்து இன்னும், அந்த விசயம் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது. டேவிட் வார்னர் அல்லது ஸ்மித் இல்லை, எந்வொரு டெஸ்ட் போட்டியை இழக்க விரும்பவில்லை அல்லது டெஸ்ட் தொடரில் ஈடுபாடு போன்றவை இன்னும் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

    தற்போது உள்ளது மிகவும் சிறந்த ஆல்-ரவுண்ட் அணி. ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மட்டும் அணியில் சேரவில்லை. அதிக ரன்கள் அடிக்கும் வீரர்கள் அணியில் உள்ளனர். கடந்த 18 மாதங்களாக ஒவ்வொரு வீரர்களும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நாங்கள் சில சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம்’’ என்றார்.
    ‘இந்திய அணிக்கு எதிரான போட்டி தொடரின் போது வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தெரிவித்தார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    சமீபத்தில் எனக்கு 34-வது வயது பிறந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தியாவுக்கு எதிரான தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை வம்புக்கு இழுக்க (சிலெட்ஜிங்) முயலும் வீரர்களிடம் இருந்து விலகி செல்லவே நான் விரும்புகிறேன். காலப்போக்கில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுவாகும். என்னை சீண்டுபவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்யாமல் எனது பேட் மூலம் பதில் கொடுக்க முயற்சி செய்வேன்

    ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல தொடக்கம் கொடுப்பதுடன், மிடில் ஓவர்களில் உள்ள சிரமத்தை உணர்ந்து அதற்கு தகுந்தபடி விளையாட வேண்டும். முடிந்த அளவுக்கு நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவதுடன் ஸ்டிரைக் ரேட்டையும் நன்றாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆக்ரோஷத்தை குறைத்து எனது பேட்டிங்கை ஒழுங்காக வெளிப்படுத்தி வருகிறேன்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடியவர். அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஆடாதது இழப்பாகும். ஆனால் இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், மயங்க் அகர்வால் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

    விராட்கோலி இல்லாத சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை வகிக்க இருக்கும் ரஹானே மிகவும் அமைதியானவர். அவரது ஆட்ட அணுகுமுறை நன்றாக இருக்கும். அவர் கிரிக்கெட் அறிவு படைத்தவர். அவரை சீண்டுவதற்கு முன்பு நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும். இந்திய அணியை பொறுத்த மட்டில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் தன்மை கொண்ட மூன்று, நான்கு சிறந்த வீரர்கள் உள்ளது அவர்களுக்கு அனுகூலமாகும்.

    வழக்கம் போல இந்த தொடரிலும் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அடுத்த ஒரு வருடத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக எத்தனை ஆட்டங்களில் விளையாடுவேன் என்று சொல்வது கடினமானதாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கடந்த 6 மாதங்களில் விளையாடியது மிகவும் சவாலாக இருந்தது. குடும்பத்தை பிரிந்து இருத்தல், தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பது என்பது கடினமான விஷயமாகும். அடுத்த 12 மாதங்களில் சர்வதேச போட்டிகளில் ஆடுவது மிகவும் கடினமானதாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும், அதனை அடுத்து 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவோம். அத்துடன் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி குறித்தும் கவனம் செலுத்துவோம். எனக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நேரத்தை செலவிடவும் கடமைப்பட்டு இருக்கிறேன். எனவே மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடுவது என்பது மிகவும் கடினமானதாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வரை பிக்பாஷ் போட்டியில் விளையாடமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதியும், 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்த அவர்கள் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை.

    அவர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஆஸ்திரேலியா வருவார்கள் என்று அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆடுவது சந்தேகமே. அவர்கள் முழு உடல் தகுதி பெறாததால் விளையாடு வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

    இதன்காரணமாக அணி நிர்வாகம் டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரேயாஷ் அய்யர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டிகள் முடிந்த பிறகு அவர் மற்ற வீரர்களுடன் நாடு திரும்புவார்.

    தற்போது ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக தேர்வு செய்வதால் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து இருப்பார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    விராட்கோலி இல்லாத நிலையில் ரோகித்சர்மாவும் டெஸ்ட் தொடருக்கு முழு உடல் தகுதி பெறுவாரா? என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதனால் ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

    ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.

     இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவல்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை “கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது

    அருண் துமல் கூறும்போது கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவை குறைக்க முடிந்தது. நாங்கள் ரூ.4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்து உள்ளனர் என கூறினார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் உள்ள 3 இடங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் வாஸ்கோவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ரபெல் கிரிவெல்லாரோ தலைமையிலான சென்னையின் எப்.சி. அணி, பீட்டர் ஹார்ட்லி தலைமையிலான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை சந்திக்கிறது.

    2 முறை சாம்பியனும், கடந்த சீசனில் 2-வது இடத்தை பிடித்ததுமான சென்னை அணியில் அனிருத் தபா, எலி சபியா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். புதிதாக வெளிநாட்டு வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அணியின் செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக சபா லாஸ்லோ (ஹங்கேரி) உள்ளார்.

    கடந்த சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து சரிவில் இருந்து மீண்டு வர வழிகாட்டிய ஓவென் கோய்லே இந்த முறை ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதேபோல் கடந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக கோல் அடித்த வல்ஸ்கிஸ்சும் அந்த அணியில் இணைந்துள்ளார். கடந்த காலங்களில் அரைஇறுதியை ஒரு முறையும் எட்டாத அந்த அணி தற்போது புதிய வீரர்கள் வருகையால் எழுச்சி காணும் என்று நம்பப்படுகிறது.

    சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 2 முறையும், ஜாம்ஷெட்பூர் ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. வெற்றி கணக்குடன் போட்டியை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இதற்கிடையில் நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஐதராபாத் அணிக்கு 35-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அரிடேன் ஜீசஸ் கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் என வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்
    புதுடெல்லி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது மனதளவில் வேதனையை ஏற்படுத்தியது என்று அவரே வருத்தம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். ரன் குவிப்பதை வைத்து வீரர்களை நான் பார்க்க மாட் டேன். அவர்களது ஆட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் பார்ப்பேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தை அளித்தார். ரோகித் சர்மா, குயின்டான் டி காக்குக்கு அடுத்தபடியாக அவர் நெருக்கடியான நிலையில் களம் இறங்குகிறார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் 3-வது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராக வும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருந்து, தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என்று முகமது சிராஜ் தெரிவித்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ் (53 வயது) நுரையீரல் நோய் காரணமாக நவம்பர் 20-ம்தேதி (20.11.2020) காலமானார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் சிராஜ். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு இடிந்து போயுள்ளார் அவர்.

    தந்தையை இழந்த சிராஜ் இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சொல்லிவிட்டார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘‘இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என உறுதி ஏற்றுள்ளான் சிராஜ்’’ என தெரிவித்துள்ளார் அவரது மூத்த சகோதரர் இஸ்மாயில்.

    ஆஸ்திரேலிய தொடருக்கு அவன் தேர்வாகியிருந்தபோது அப்பாவுக்கு அதை போன் மூலம் சொல்லியிருந்தார். அப்பாவின் இழப்பு செய்தியை அறிந்து அவர் இடிந்து போயுள்ளார். அந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு போன் செய்யும் போதெல்லாம் அழுது கொண்டே இருக்கிறார். எங்களுக்கும் வலி இருந்தாலும் நாங்கள் எல்லோரும் அவரை தேற்றி வருகிறோம். ஆண்டவன்தான் அவருக்கு சக்தி கொடுக்க வேண்டும். கடல் கடந்து உள்ள அவருக்கு நாங்களும் போன் செய்து கொண்டுதான் இருக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

    சிராஜின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தை கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். அவருடன் ஜோ பேர்ன்ஸ் மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரரான வில் புக்கோவ்ஸ்கி களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நானும் ஜோ பேர்ன்ஸும் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரர்களாக களம் இறங்கி சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். ஜோ பேர்ன்ஸ் நீண்ட காலத்திற்கான வீரர் என்பது எனக்குத் தெரியும். ஆடுகளத்தில் இறங்கிவிட்டால், ஒருவருக்கொருவர் ஆட்டமும் சிறப்பாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இடத்திற்கு யார் சரியான நபராக இருப்பார்கள் என்பதை தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
    ×