என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
    • இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று லான் பவுல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    • 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வென்றது.
    • இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் 8வது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் கியூபா அணியை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய பி அணி, 3-1 என வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் பேபியானோ கரானாவை வீழ்த்தினார். இதன்மூலம் குகேஷ் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரவுனக் சத்வானி, லீனியர் டொமிங்குவேசை வென்றார். 

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் பந்தய துரத்தை 8.11 நிமிடங்களில் கடந்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பந்தய துரத்தை 8 நிமிடம் 11.20 வினாடிகளில் கடந்தார். இது அவரது தனிப்பட்ட சாதனை மற்றும் தேசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா 8வது இடத்தைப் பிடித்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் கடந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.

    இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இப்போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா (47:14.13) 8வது இடத்தைப் பிடித்தார்.

    காமன்வெல்த் வேகநடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஹர்மிந்தர் சிங் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் வெண்கலம் வென்றார்.

    • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
    • மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மல்யுத்த வீரர் மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றதன் மூலம், மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    இந்நிலையில் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் மல்யுத்த வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பமுடியாத வடிவம். பதக்கப் பட்டியலில் மோஹித் கிரேவால் இணைந்துள்ளார். அவர் ஒரு வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது அவரது கூர்மையான கவனம் தனித்து நிற்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்தன.
    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது.

    இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
    • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரிட்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

    • நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
    • இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.

    இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.

    இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளாக சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.
    • இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார். 6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இன்று நடந்த 7வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    ×