search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    4வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் அபாரம்... இந்தியா 191 ரன்கள் குவிப்பு
    X

    ரிஷப் பண்ட்

    4வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் அபாரம்... இந்தியா 191 ரன்கள் குவிப்பு

    • இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    Next Story
    ×