என் மலர்
விருதுநகர்
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உள்பட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை, சிவகாசியில் இருந்து கழுகுமலை செல்லும் மெயின் ரோடு, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் உள்ளிட்ட கண்காணிப்புக்குழுவினர் வாகனங்கள் மற்றும் பட்டாசு ஆலைக்கு சொந்தமான வேன்களிலும் முழுமையாக சோதனை நடத்தினார். இந்த சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கடை பஜார், காசுக்கடை பஜார் மற்றும் சந்திவீரர் தெருக்களில் உள்ள சில கடைகளில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக அருப்புக்கோட்டை நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ரூ.2,73,600 மதிப்பிலான 256 கிலோ குட்கா மற்றும் ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன், கண்ணன், முத்துமுருகன், நவநீதன், பாக்கியராஜ், சிவராமன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தில் பெத்து செட்டியபட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலை மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்றது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. மருந்து கலக்கும் அறையில் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30) என்ற ஊழியர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் இருந்த ஊழியர் சங்கரலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்ற அறைகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனர்.
வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி கணேசன் விசாரணை நடத்தினார். அதேபோல போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. உங்களுக்கு வேலை செய்வதற்காக வந்துள்ளோம். உயர்ந்த நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும், இலவசங்கள் கிடையாது. ஏனெனில் இலவசங்களால் ஏழ்மையை போக்க முடியாது.
நாம் வறுமையற்ற அருப்புக்கோட்டையை உருவாக்குவோம். நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்வதாக கூறுகிறார்கள். எனது சொந்த செலவில் நான் ஹெலிகாப்டரில் செல்கிறேன்.
கஜா புயலைப் பார்வையிட்டது போல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. நமது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார்கள். இவர்களுக்கு நான் பல்லக்கு தூக்குவேன். என் தோளில் சுமப்பேன்.
எனது வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கூறுகிறார். மிகுந்த பசியில் உள்ள அவர்கள் இரட்டை இலையில் கூட சாப்பிடுவார்கள்.
திரைப்பட வாய்ப்பை விட்டு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி நஷ்டம் அல்ல. வருமானத்தை விட்டு விட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. இடையூறு செய்யாமல் இருந்திருந்தால் எனது வருமானத்தை ரூ.250 கோடியாக காட்டியிருப்பேன்.
ஆட்சியாளர்கள் பெரும் தொகையை எடுத்துக் கொண்டு இலவசங்கள் என்ற பெயரில் சில்லறையை வீசுகிறார்கள்.
உங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று கூறுங்கள். அல்லது ரூ.5 லட்சம் கேளுங்கள். சலுகைகளை கொடுத்தால் அதை திருப்பி வாங்க டாஸ்மாக் என்ற கல்லாப் பெட்டியை வைத்துள்ளார்கள்.
கல்வியை, கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை பாதுகாப்பாக விற்கிறார்கள். இங்கு படிப்புக்கு மதிப்பில்லாமல் போகிறது. எனவே இளைஞர்களின் திறனை மேம்படுத்த செய்ய வேண்டும்.
திறன் மேம்பாட்டு மையம் அமைப்பது இந்தியாவின் புதிய சத்தியாகிரகம். மனிதவளம் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக உயர்த்தப்பட வேண்டும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் தமிழன் வெல்வான். நாங்கள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம்.
தமிழகத்தை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என்பதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.
அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.






