என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 26-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி
Byமாலை மலர்25 March 2021 9:06 AM GMT (Updated: 25 March 2021 9:06 AM GMT)
வருகிற 26-ந்தேதி பிரதோஷம் மற்றும் 28-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நாட்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.
அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.
அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X