என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சக தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவுவேன் - உரிமையாளர்களிடம் எம்.பி.உறுதி
    X
    அச்சக தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவுவேன் - உரிமையாளர்களிடம் எம்.பி.உறுதி

    அச்சக தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவுவேன் - உரிமையாளர்களிடம் எம்.பி.உறுதி

    சிவகாசி பகுதியில் சுமார் 800 அச்சகங்கள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
    சிவகாசி:

    அச்சுத்தொழிலில் உப தொழில்களான லேமினேஷன், ஸ்கோரிங் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. சிவகாசியில் அச்சடிக்கப்படும் அச்சுப்பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு சிவகாசியிலிருந்து பள்ளி நோட்டுப்புத்தகம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அச்சு காகிதம் மற்றும் காகித அட்டை ஆகியவை கடுமையாக விலை உயர்ந்து வருவதால் சிவகாசியில் அச்சு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து நேற்று சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இந்தியாவில் காகித தேவை அதிகமாக உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றனர். அப்போது சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோகனுக்கு ஆதரவு கேட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி. சென்றார்.

    அவரிடம் அச்சக அதிபர்கள் தங்கள் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி, உங்கள் பிரச்சினைகளை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.
    Next Story
    ×