என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஊழியர் பலி
Byமாலை மலர்25 March 2021 10:02 AM GMT (Updated: 25 March 2021 10:02 AM GMT)
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தில் பெத்து செட்டியபட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலை மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்றது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. மருந்து கலக்கும் அறையில் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30) என்ற ஊழியர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் இருந்த ஊழியர் சங்கரலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்ற அறைகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனர்.
வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி கணேசன் விசாரணை நடத்தினார். அதேபோல போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தில் பெத்து செட்டியபட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலை மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்றது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. மருந்து கலக்கும் அறையில் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30) என்ற ஊழியர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் இருந்த ஊழியர் சங்கரலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்ற அறைகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனர்.
வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி கணேசன் விசாரணை நடத்தினார். அதேபோல போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X