என் மலர்
விருதுநகர்
மதுரை வளர்நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
இவர் தனது மனைவி மகேஸ்வரி (37), மகன் முகேஷ் (9), மகள் நிதன்யா (7) ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மகன் முகேசுக்கு மொட்டை போட்டு விட்டு மதுரைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரியாபட்டியை அடுத்த கல்குறிச்சி அருேக வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முருகானந்தம், முகேஷ், மகேஸ்வரி, நிதன்யா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் முகேஷ் பரிதாபமாக இறந்தார்.
முருகானந்தம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்ேவறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
முக கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், வலையபட்டி மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கர் பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கீழாண் மறைநாடு, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், போலீசாருடன் சென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கண்டிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து முக்கிய இடங்களில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளத்தில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

ெகாரோனா பாதிப்பை தவிர்க்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 750-வது நபராக நான் தடுப்பூசிபோட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இம்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனை எனது வேண்டுகோளாக கூறுகிறேன்.
இதன் மூலமே கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் மாநிலங்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல.
அவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாகவும் நடந்துகொள்ளவில்லை. ஒரு டாக்டராகவும் நடந்துகொள்ளவில்லை.
மத்திய அரசு கொரோனா 2-வது அலையின் தாக்கம் மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.
அப்போதுதான் பாதிப்பினை தவிர்க்க முடியும். அதை விடுத்து மாநில அரசின் மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏழு அம்ச திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய மந்திரிகள் பிரதமருக்குத்தானே கடிதம் எழுதியுள்ளார் என்று கருதி நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.
யார் ஆலோசனை கூறினாலும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலைமை இப்படி தடுப்பூசி போட்டால் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தடுப்பூசி போடும் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய படைகளை கையாளும் விதம் எவ்வாறு என்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சம்பவமாகும்.
திரிணாமுல்காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுபற்றி நாட்டு மக்களுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,100 ஆக உயர்ந்துள்ளது. 16,689 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 178 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 234 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது.
அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில் ஒன்றாக கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. சாத்தூர் டவுன் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாக்கியராஜ், கிருஷ்ணசாமி, மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த 250 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
அத்துடன் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பணக்குடியைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி சரண்யா (வயது 24). இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.
அழகுமுத்து சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் சங்குவள்ளி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அங்கு சரண்யாவும், அவரது மகனும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்குவள்ளி, மகள் மற்றும் பேரனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார். 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்த சரண்யா பாட்டிலை கீழே வீசி இருக்கலாம். அதனை எடுத்து சிறுவன் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு சரண்யா குடித்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.






