என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்
Byமாலை மலர்12 April 2021 1:05 AM GMT (Updated: 12 April 2021 1:05 AM GMT)
ஆலங்குளம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதத்தை போலீசார் விதித்தனர்.
ஆலங்குளம்:
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்ேவறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
முக கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், வலையபட்டி மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கர் பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கீழாண் மறைநாடு, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், போலீசாருடன் சென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கண்டிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து முக்கிய இடங்களில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளத்தில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்ேவறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
முக கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், வலையபட்டி மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கர் பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கீழாண் மறைநாடு, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், போலீசாருடன் சென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கண்டிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து முக்கிய இடங்களில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளத்தில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X