என் மலர்
வேலூர்
- சன்னதிகள் புதுபிக்கப்பட்டது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சுவர்ணபந்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடந்தது.
1949-ம் ஆண்டு மார்ச் மாதம் தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி ஆன்மீக பெரியோர்களால் அந்த இடத்தில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி சுந்தரராம் சுவாமிகளால் முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி அஷ்டபந்தன மற்றும் சுவர்ணபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து தற்போது கோவிலில் உள்ள பழனி ஆண்டவர், ஐயப்பன், ஸ்ரீ ராமர், காசி விஸ்வநாதர், சனி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷே கத்தையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் தொடங்கி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி யாகம் நடந்தது.
கும்பாபிஷேகம்
இதனை தொடர்ந்து இன்று 4-வது முறையாக சுவர்ணபந்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை யாக பூஜைகளும், சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக சிம்ம லக்னத்தில் கோவிலின் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த ஆலயத்தில் ஸ்ரீ பழனியாண்டவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி சுவர்ணபந்தன முறையிலும், பரிவார மூர்த்திகளாகிய விநாயகப்பெருமான், அகில லோக நாயக நாயகியாகிய விசாலாட்சி சமேத விஸ்வநாதனுக்கும், காக்கும் தெய்வம் ஸ்ரீ வெங்கடாஜலபதி, சங்கடம் தீர்க்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் மூர்த்திகளுக்கு ரஜித பந்தனமும், குரு தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நால்வர் பெருமக்கள், பிணி தீர்க்கும் நவகிரக மூர்த்திகளுக்கு தாமிரபந்தன முறையிலும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகிகள் ஸ்ரீ வீரபத்திர சுவாமி நிர்வாக அறக்கட்டளை ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபையினர் , சைதாப்பேட்டை வாசிகள் செய்திருந்னர்.
- 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
- 14 தனிப்படையினர் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் காவல் நிலைய போலீசார் மட்டு மின்றி 14 தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், மாவட்டத்தில் உள்ள அல்லேரி, சாத்கர், ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த மே 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்பட்ட சாராய வேட்டையில் மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவான 112 பேரை தேடும் பணி தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் கூறும்போது:-
"வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளில் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டுவந்த 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.
சாராய தடுப்பு வேட்டையின் மூலம் சுமார் 56 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 13 ஆயிரத்து 858 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 372 மதுபாட்டில்கள், சாராய ஊறலுக்கு பயன்படும் வெல்லம் சுமார் 5 ஆயிரத்து 110 கிலோ, வெள்ளை சர்க்கரை சுமார் 870 கிலோ, வேலம் பட்டை சுமார் 700 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
23 வாகனம் பறிமுதல்
சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். வரை
சாராய தடுப்பு வேட்டையின் போது சுமார் ரூ.34 ஆயிரத்து 500 மதிப்பிலான சுமார் 3.5 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரும் வரை சாராய தடுப்பு வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சாராய தடுப்பு வேட்டையின் ஒரு பகுதியாக சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்துவோருக்கு மறுவாழ்வு நிதி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது மனம் திருந்திய முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகள் 219 பேருக்கு தலங் ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி வழங்க மாவட்டடி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
- 70 லிட்டர் பறிமுதல்
- போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த சின்னப்புதூர் அருகே உள்ள எள்ளுபாறை மலை அடிவாரத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் கலாச்சாராயம் நின்றுக்கொண்டு இருந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எள்ளுப்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் (45) என்பதும், இவர் கள்ள சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
சின்னப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பீஞ்சமந்தை அடுத்த குண்ராணி பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த எள்ளுப்பாறை பகுதியை சோ்ந்த பிரபு (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி , ஜெயிலில் அடைத்தனர்.
- அவமானம் தாங்காமல் திரவத்தை குடித்த மாணவி
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன், கொசண்ணாமலை தெருவை சேர்ந்தவர் சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு (வயது 23).
இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த மாண விக்கும், சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்தி ரமடைந்து சந்துரு சக மாண வர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்ப டுகிறது.
பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி அழுது கொண்டே இருந்தார். சக மாணவ-மாணவிகள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கதிர் ஆனந்த் எம்.பி. நடவடிக்கை
- ரூ.7.76 கோடி ஒதுக்கீடு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி யின் மையப்பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அதனை சரி செய்வதற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி ஆய்வுக்கு பின்னர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பதுடன் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.
ஆனால் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
இதையடுத்து வேலூர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்ப ப்பட்டது.
மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் கதிர் ஆனந்தும் இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைகளை ஏற்று ரூ.7.76 கோடி செலவில் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவு மாற்றியமைப்பது, வடிகால் மற்றும் பாதுகாப்பு பலகைகள் உள்பட அப்பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இதற்கான ஏல ஆவணங்களை அடுத்த 4 நாள்களுக்குள் தயார் செய்து அளிக்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கூறுகையில்:- 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்த லின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூர் கிரீன்சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்கவும், சர்வீஸ் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தி ருந்தேன்.
அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணை யம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்.
- நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வேலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
ரங்கநாதர் நகர் பகுதியை சார்ந்த ஜோதி என்பவர் வீட்டில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் 3,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்.
- ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
- ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக்கொண்டு ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு வெளியானது.
இதற்காக அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்தது. ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வாரி குவித்தது.
குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களுக்கு வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது.
இது குறித்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். வட மாவட்டங்களில் ஐ.எப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர்.
ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் இருந்து பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதே போல் செங்குட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
நெமிலியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
இந்த சம்பவத்தால் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்
- போக்குவரத்து விதி மீறியதாக குறுஞ்செய்தி வந்தது
- எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்
வேலூர்:
வேலூர் காகிதப்பட்ட றையை சேர்ந்தவர் தயாளன் (வயது 40). இவர் வேலூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார்.
அப்போது அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்தியில் தயாளனின் ஆட்டோ கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதி மீறியதாகவும் அவரது ஆட்டோவிற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தயாளன் இது குறித்து இன்று எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்.
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- முறையாக சட்டம் படித்தவர்களை மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வக்கீல்கள் பாலச்சந்தர் ரவி பாஸ்கரன், உலகநாதன், ராஜ்குமார், காஞ்சனா சுமதி, காலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொழில் செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதால் அவர்களது உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு இல்லை வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் வழக்கறிஞர்களுடைய சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வழக்கறிஞர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் ஜூடிசியல் அக்கவுண்டபிலிட்டி கமிட்டி ஒன்றை உருவாக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொள்வது, முறையாக சட்டம் படித்தவர்களையும் மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் முறையற்ற முறையில் வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்ததாக கொண்டுவரப்படும் சான்றிதழ் சரி பார்ப்பினை மிகவும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
- மின்வாரிய ஊழியர்கள் ஒயரை சரி செய்தனர்
வேலூர்:
காட்பாடி ஜே.ஜே.நகரில் மின் வயரில் சப்ளை குறைவாக வருவதால், 3 பேஸ் லைனாக மாற்றித் தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, 3 பேஸ் லைனாக மின்கம்பிகள் மாற்றியமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், காற்று அடிக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று உரசி மின்வயர் அறுந்து விழுந்து விடுகிறது.
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்யக்கோரி அந்த பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லையாம். இந்த நிலையில் இன்று மதியம் காட்பாடி செங்குட்டை பகுதியில் பலத்த காற்று வீசியது.
அப்போது ஜே.ஜே. நகர் பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்ட இடத்தில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பிகள் திடீரென அறுந்து கீழே விழுந்தது.
மின்சாரம் பாய்ந்தபடி அறுந்து தொங்கிய மின்ஒயரால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் அந்த பகுதி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து தொங்கிய மின் ஒயரை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை அதிகாரிகள் சரி செய்யாமல் கவனக்குறைவுடன் செயல்படுகின்றனர். இதேபோன்று ஏற்கனவே 3 முறை மின் வயர் அறுந்து விழுந்துள்ளது.
பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பொதுமக்கள் அதிகம் நடமாடுவதால் மிகவும் அச்சமாக உள்ளது. இன்று மின் ஒயரை சரி செய்த பிறகும் கூட வழக்கம் போல் தாழ்வாகவே செல்கிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன்பு தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்
- வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்தது
வேலூர்:
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேடயங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-
ஜூலை 1-ந்தேதி இந்தியா முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர்களுக்கு சமூகத்தில் முக்கிய பங்கு உண்டு. நோயாளிகளின் நல்வாழ்வுக்காக டாக்டர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.
நோயுற்ற நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறார்கள்.
மேலும், மருத்துவ அறிவியலை நன்கு புரிந்து கொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணி க்கிறார்கள்.
நோயினாலும் அவர்களது உறவினர்க ளாலும் தாக்கப்பட்டாலும் டாக்டர்கள் கைவிடாத பல சம்பவங்களில் பொது மக்களுக்கான மருத்துவ சேவை களை தொடர்கின்றனர். உயிர் காக்கும் மருத்துவத்தை போற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
- துக்கம் தாளாமல் மருமகளும் தற்கொலை செய்து கொண்டார்
- புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்
வேலூர்:
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் இன்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அப்போது காட்பாடி ஏரி முனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி அவரது மனைவி கோவிந்தம்மாள் தனது பேரன்களுடன் வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது மூத்த மகன் ரஞ்சித் குமார் கடந்த மே மாதம் 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் ஏரியில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
எனது மகன் அவரது நண்பர் ஒருவருடன் அன்று இரவு செல்போனில் திட்டியபடி பேசிக் கொண்டு இருந்தனர். அவர் இறந்த துக்கம் தாளாமல் மருமகளும் தற்கொலை செய்து கொண்டார் இதனால் அவரது இரண்டு மகன்கள் பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர்.
எனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காட்பாடி போலீசில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
காட்பாடி அடுத்த குப்பிரெட்டி தாங்கள் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் தெரு ஓரத்தில் ஆடு மாடுகளை கட்டி பராமரித்து வந்தார்.
இவர் கையில் கத்தியுடன் மனு கொடுக்க வந்தார்.அவர் கூறியதாவது:-
எனது மகன் மணிகண்டன் ஆடு மாடுகளை பராமரிக்கும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் இங்கு ஆடு மாடுகளை கட்டக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் மகனின் காலில் வெட்டினார்.
இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் செய்தேன் அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவே எனது மகனை வெட்டிய கத்தியுடன் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதனால் எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






