என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது
    X

    காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது

    • அவமானம் தாங்காமல் திரவத்தை குடித்த மாணவி
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன், கொசண்ணாமலை தெருவை சேர்ந்தவர் சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு (வயது 23).

    இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த மாண விக்கும், சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்தி ரமடைந்து சந்துரு சக மாண வர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்ப டுகிறது.

    பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி அழுது கொண்டே இருந்தார். சக மாணவ-மாணவிகள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×