search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கிய 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கிய 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    ரங்கநாதர் நகர் பகுதியை சார்ந்த ஜோதி என்பவர் வீட்டில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து போலீசார் 3,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×