என் மலர்tooltip icon

    வேலூர்

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) இவருடைய மனைவி அஞ்சலி (வயது 38) இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த சில மாதங்க ளாகவே கணவர் வசந்தகுமார் மனைவி மீது சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இதனையடுத்து நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று விடியற்காலையில் வீட்டில் உள்ள குளியலறையில் அஞ்சலி தன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததை கண்டு இவரது உறவினர்கள் வந்து பார்த்த போது அஞ்சலி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அச்சம்
    • வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது. அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

    மேலும் 13 பேர் கொண்ட வனத்துறையினர் ஊனை மோட்டூர், ஏரிப்புதூர், நாராயிணபுரம், கவுதமபுரம், ஊனை வாணியம்பாடி, ஊனை, ஊனை பள்ளத்தூர், பெரிய ஊனை, கந்தனேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பூனையை கொன்றது சிறுத்தை இல்லை, நாய் என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் வனப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை இழந்த தவிக்கின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    அணைக்கட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மற்றும் ஏரிப்புதூர் கிராமத்திலும் தற்போது சிறுத்தை நடமாட்டம் இல்லை.இந்த வீடியோ முற்றிலும் தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

    சமூக விரோதிகள் யாரோ ஒரு சிலர் செய்த தவறுகளால் தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இது போன்ற பொய்யான பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மீன்கள் வாங்க பொதுமக்கள் குறைந்தளவே வந்திருந்தனர்
    • புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.

    வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன்கள் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. புரட்டாசி மாதம் என்பதால் மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது.

    இதன் எதிரொலியாக மீன்கள் விற்பனையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலையில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது.

    சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ. 200-க்கும், கட்லா ரூ. 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி ரூ.140, வவ்வால் ரூ.450-க்கும், டேம்வவ் வால் ரூ.150-க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 53). கணவரை இழந்த அவர் தனியாக தம்பி வீட்டில் வசித்து வருகிறார்.

    உமாராணி தோளப்பள்ளி கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை வீட்டு வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தார். வீட்டு வாசலில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் டிப்டாப் உடையில் நின்றிருந்தனர்.

    அவர்கள், உமாராணியிடம் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை கொடுத்தால், உங்கள் கண் எதிரே சிறிது நேரத்தில் பளிச்சென மாற்றி தருவதாக கூறினர்.

    இதை நம்பிய அவர் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார். வாலிபர்கள் கூறியபடியே சிறிது நேரத்தில் பாத்திரங்களை பளிச்சென மாற்றி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள், இதேபோல் வெள்ளிப்பொ ருட்களையும் பாலீஷ் செய்து தருவோம், என்றனர். உடனே உமாராணி தன்னிடம் இருந்த வெள்ளி கால் கொலுசை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். வெள்ளிக்கொலுசையும் அவர்கள்' பளிச்சென மாற்றி கொடுத்தனர்.

    இந்தநிலையில் வாலிபர்கள், தங்க நகைகளில் அழுக்கை நீக்கி புதிய நகை போல் பாலீஷ் செய்து தருவோம், என்றனர்.

    இதைக்கேட்ட உமாராணி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். வாலிபர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் ரசாயனத்தை கலந்து, தங்க சங்கிலியை போட்டுள்ளனர். அப்போது வாலிபர்கள், உமாராணியிடம் பேசியபடியே அந்த பாத்திரத்தில் இருந்து தெரியாமல் சங்கிலியை திருடி கொண்டு, பாத்திரத்தில் சங்கிலி இருப்பதாக கூறி அவரிடம் கொடுத்து விட்டு, திடீரென அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

    பாத்திரத்தில் தங்க சங்கிலி இருப்பதாக நினைத்துக்கொண்ட உமாராணி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று பார்த்தபோது, அதில் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தாம் மோசம் போய் விட்டோம் என்பதை உணர்ந்த உமாராணி, வீட்டுக்கு வெளியே வந்து சத்தம்போட்டு கத்தியவாறு வாலிபர்களை பின்தொடர்ந்து ஓடி உள்ளார்.

    ஆனால் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து உமாராணி, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
    • நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் 270 பெண் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மினி மாரத்தான் போட்டி

    அதன்படி, நேற்று நடந்த போட்டியில் முதல் 3-இடங்களை பிடித்த 2-ம் நிலை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இதைதொடர்ந்து, இன்று காலை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்தார். இதில் காவலர் பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் கனிமொழி, விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    சான்றிதழ்

    வேலூர் கோட்டை நுழைவு வாயில் காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, மீன் மார்க்கெட், கோட்டை பின்புறம், அண்ணா கலையரங்கம் வழியாக அண்ணா சாலை, கோட்டை மைதானத்தில் ஒரு சுற்று என 5 கி.மீ.நடந்தது.

    இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    • மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது பரிதாபம்
    • தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 40). இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில பசு மாடு தவறி விழுந்தது.

    இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.

    • 2 மணி நேரம் போராடி மீட்டனர்
    • சாலை அமைக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள வெள்ளாண்டப்பன் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒடுகத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மலை கிராமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒடுகத்தூர் முதல் வெள்ளாண்டப்பன் கோவில் வரை உள்ள மலை பாதையில் போலீசார் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிப்பட்டு மலை கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் ரோந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதனை போலீசார் மற்றும் அந்த வழியாக சென்ற பக்தர்கள் மீட்க முயன்றனர்.

    முடியாததால் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் டிராக்டர் மூலம் சுமார் 2 மணி நேரம் கழித்து போலீஸ் ரோந்து வாகனம் மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்:-

    எங்கள் மலை கிராமத்தில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. தினமும் இது போன்ற சிக்கல்களில் தான் நாங்கள் கடும் அவதி அடைகிறோம். எனவே எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையொட்டி ஏற்பாடு
    • வெள்ளாண்டப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பி க்கப்பட்டது.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டி ருந்தன.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம்

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் உள்ள வெள்ளாண்டப்பனுக்கு சிறப்பா அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபா ரதனை காண்பிக்கப்பட்டது. விடியற்காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 கிலோமீட்டர் நடந்து சென்று, பொரி, கடலை, சர்க்கரை பொங்கலுடன் சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேலும் பக்தர்கள் மொட்டையடித்தும், குழந்தை வரம் வேண்டி அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணம் வரம் வேண்டி தாலிக்கயிறு கட்டியும், வேலை வேண்டி கோரிக்கை அடங்கிய பேப்பரை மரத்தில் கட்டி வேண்டினர்.

    • வழக்கிலிருந்து விடுவிக்கும்படி மிரட்டல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    ஊசூர் அருகே உள்ள பெரியதெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி உள்ளார்.

    இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.

    இந்நிலையில் வழக்கில் ஆஜர் ஆவதற்காக அழகேசன் நேற்று கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது வழக்கிலிருந்து விடுவிக்கும்படி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் லதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ நிலையத்தில் அழகேசன் மீது லதா புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்தனர்.

    • பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் பள்ளிகொண்டா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டைகளை எடுத்து வந்த 2 பேரை மடக்கி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), முருகன் (37) என்பதும், இவர்கள் பைக் மூலம் மூட்டைகளில் மணல் கடத்தியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

    • 2 பேரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்ட்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை அருகே உள்ள தேக்குமரத்தூர் மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டுக்கு நடுவே செல்லும் காணாற்று ஓடையில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 2 பேரல்கள் மற்றும் 1000 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.

    மேலும், இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்காடு மலை கிராமத்தை சேர்ந்த தமிழ், பழனி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • வனத்துறையினர் விழிப்புணர்வு
    • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் புள்ளிமான், காட்டுபன்றி, காட்டு எருமை, முள்ளம்பன்றி. மயில், குரங்குகள் போன்ற வனவிலங்குகள் உணவைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

    அதேபோல் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு உள்ளிட்ட விஷப்பாம்பு வகைகளும் ஊருக்குள் அடிக்கடி படையெடுத்து வருகின்றது.

    இது போன்ற நேரங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் இரவும் பகலும் பாராமல் வனத்துறையினர் விரைந்து சென்று பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விடுகின்றனர்.

    அதேபோல் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் இளை ஞர்கள் சாகசம் செய்வதாக நினைத்து பாம்புகளை கைகளால் பிடிக்கின்றனர்.

    இளைஞர்கள் பிடிக்கும்போது பாம்புகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது.

    மேலும் பாம்புகளை பொதுமக்கள் பிடிக்கும் போது அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இளைஞர்கள் பாம்புகளை பயிற்சி இல்லாமல் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனச்சர கத்திற்க்கு உட்பட்ட மலைப்பகுதிகளை சார்ந்து இருக்க கூடிய சுமார் 10-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் நேற்று வனச்சரகர் இந்து தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் துண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×