என் மலர்
வேலூர்
- மாணவர்களுக்கு அழைப்பு
- வேலூர், அமிர்தி பூங்காவில் நடக்கிறது
வேலூர்:
தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வன விலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் வனக்கோட்டத்தில் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வனவிலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை காலை 7 மணி அளவில் இயற்கை நடைஎன்ற தலைப்பில் நடை போட்டி சத்து வாச்சாரி, தீர்த்தகிரி முருகன் கோவிலில் இருந்து தொடங்க உள்ளது.
இதில் கலந்து கொள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இது தொடர்பான பதிவுகள் 9655413566 7904443195 மற்றும் 9952131786 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.
7-ந் தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மேல்நிலை பள்ளியில் ஓவிய போட்டி, வினாடி வினாபோட்டி மற்றும் பேச்சு போட்டி கள்முறையே வனவிலங்கு பாதுகாப்பு சுற்றுசூழல், வனம் மற்றும் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் நமது பங்கு ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.
மேலும், அமிர்தி வன உயிரின பூங்காவில் விழிப்புணர்வு முகாம், பள்ளி குழந்தைகள் இலவ சமாக அமிர்தி பூங்காவை பார்வையிடுதல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் நமது பங்கு என்ற தலைப்பில் ஓவிய மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- போக்குவரத்து நெரிசல்
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் மாதய்யன். இவர் தனது காரை வேலூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு பழுது பார்க்க ஓட்டி சென்றார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரில் புகை வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாதய்யன் காரில் இருந்து உடனே வெளியே இறங்கி ஓடி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியதால், அந்தப் பகுதியில் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.
இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், தீப்பிடித்து எரிந்த கார் வெடுத்து விடுமோ? என பயந்து தூரமாகவே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கார் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று, போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்ததால், சிலர் சர்வீஸ் சாலைகளில் இறங்கி எதிரும், புதிருமாக சென்றனர்.
வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது
- மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் அரசம்பட்டு கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது.மேலும் சாலையில் அங்கங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடக்கிறது.
மழை காலங்களில் சாலையில் உருவான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருகின்றனர்.
ரெட்டிபாளையம் முருகர் கோவில், கீழ்புதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆரணி மற்றும் கண்ணமங்கலம் செல்லும் பொது மக்கள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.
மேலும் சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள் சில அடிக்கடி பஞ்சர் ஆகி பாதியில் நிற்பதோடு, விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது.
புதிய சாலை அமைப்போடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும் என பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சாலையை புதுப்பிப்ப தோடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டு மென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மர்ம கும்பலுக்கு வலை வீச்சு
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மும்முனி புறவழி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளது.
இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டி யலில் பணம் மற்றும் நகை களை செலுத்து கின்றனர்.
இக்கோவிலில் சண்முகம் என்பவர் பூசாரியாக உள்ளார். வழக்கம் போல் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை கோவிலின் நடை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் கோவிலில் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
இன்று காலை கோவில் திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம கும்பல் உண்டியலில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- வேலூர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை இவரது 2 வயது மகன் ஹர்ஷன் வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்தான். ரோஜா வீட்டில் உள்ள அறையில் அமர்ந்து அவரது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டி ருந்தார்.
தெருவில் ஓடி வந்த 4 தெரு நாய்கள் சிறுவன் ஹர்ஷன் மீது பாய்ந்தன. சிறுவனை கடித்து குதறின. மேலும் 4 நாய்களும் சேர்ந்து சிறுவனை இழுத்துச் சென்றன.
இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.
உடனடியாக சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டான். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதாக புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் பெரிய ஏரியூர் கிராம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் அதில் நடந்து செல்வதால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒடுக்கத்தூர் - அணைக்கட்டு சாலையில் அரசு பஸ்களை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரிய ஏரியூர் பகுதியில் கழிவு நீர் கால்வாய், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்த மாவட்டத்தை சேர்ந்த பசுமை குழுக்களை கண்காணிக்கும் பஞ்சாயத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மொத்தமாக 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்படும்.
புதிய மரக்கன்றுகள் அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பாக அங்குள்ள காலநிலைக்கு ஏற்றதா என்பது உறுதி செய்யப்படும் என்றனர். இதில் ஒரு பகுதியாக புன்னை மரம், கல்யாண முருங்கை மற்றும் அரசமரம் ஆகியவையும் நடப்படும்.
மேலும் கொய்யா, ரோஜா செடி, நாவல், இழுப்பை, மா, நெல்லி போன்ற தாவர வகைகளும் நடப்படும். சராசரியாக, ஒவ்வொரு மரக்கன்றும் சேதமடையாமல் இருக்க 6 முதல் 8 அடி உயரம் இருக்கும்.
இந்த மாவட்டங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பராமரிக்கப்படும். தன்னார்வலர்கள் ஒரு வருடத்திற்கு வாரத்திற்கு 2 முறை மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.
கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமடையாமல் இருக்க மரத்திற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் பாதுகாக்கப்படும்.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராமங்கள் உள்ளது. இங்கு முதற்கட்டமாக, 8 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.
ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் மட்டும் பனை விதைகளை விதைப்பதற்கு பசுமை இயக்கம் தடை செய்துள்ளது. பனை விதைகள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக ஆற்றங்கரைகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது என்றார்.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் குறைந்தது 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
- சம்பளம் வழங்காததை கண்டித்து நடந்தது
- பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன
வேலூர்:
வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் தூய்மை பணியில் 500 பெண்களும், 400 ஆண்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் தனி நபர் ஒருவர் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் இ.எஸ்.ஐ, பி.எப் சேர்க்கப்படவில்லை.
இதனை கண்டிக்கும் விதமாக மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேலையை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் செய்தனர்.
அவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 12 மணிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். வராதவர்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.டி.ஓ.க்கள் சுதாகரன் சாந்தி முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தாசில்தார் வேண்டா கூறுகையில்:-
உங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- சாலையை சீரமைக்க கோரி நடத்தினர்
- பஞ். துணைத்தலைவர் தீக்குளிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் வேலூரில் இருந்து பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையை அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
நாகநதியில் இருந்து அமிர்தி செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வழியாக செல்லும் நாகநதி, மேதல்பாடி, வேட கொல்லைமேடு, நஞ்சு கொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியப்பன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
- வேலையை முடித்துவிட்டு சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சிவக்குமார் (வயது 34), டிராக்டர் டிரைவர். மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு கொல்லமங்கலத்தில் இருந்து பள்ளிகொண்டாவிற்கு பைக்கில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அகரம் சேரியை அடுத்த விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்றபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் ஆம் புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப் பட்டசிவக்குமார் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சிவக் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவி னர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.
அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






