search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைப்பாதை பள்ளத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்
    X

    மலைப்பாதை பள்ளத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்

    • 2 மணி நேரம் போராடி மீட்டனர்
    • சாலை அமைக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள வெள்ளாண்டப்பன் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒடுகத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மலை கிராமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒடுகத்தூர் முதல் வெள்ளாண்டப்பன் கோவில் வரை உள்ள மலை பாதையில் போலீசார் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிப்பட்டு மலை கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் ரோந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதனை போலீசார் மற்றும் அந்த வழியாக சென்ற பக்தர்கள் மீட்க முயன்றனர்.

    முடியாததால் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் டிராக்டர் மூலம் சுமார் 2 மணி நேரம் கழித்து போலீஸ் ரோந்து வாகனம் மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்:-

    எங்கள் மலை கிராமத்தில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. தினமும் இது போன்ற சிக்கல்களில் தான் நாங்கள் கடும் அவதி அடைகிறோம். எனவே எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×