என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது
    X

    பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது

    • பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் பள்ளிகொண்டா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டைகளை எடுத்து வந்த 2 பேரை மடக்கி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), முருகன் (37) என்பதும், இவர்கள் பைக் மூலம் மூட்டைகளில் மணல் கடத்தியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×