என் மலர்
நீங்கள் தேடியது "பைக் மணல்"
- பைக்குகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் பள்ளிகொண்டா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டைகளை எடுத்து வந்த 2 பேரை மடக்கி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), முருகன் (37) என்பதும், இவர்கள் பைக் மூலம் மூட்டைகளில் மணல் கடத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






