என் மலர்
வேலூர்
- குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலுார்:
காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 16 பேர், வேலுார் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், குடியாத்தம் தாலுகா கமலாபுரத்தைச் சேர்ந்த சாம்ராஜ் (வயது 34) என்பவர் மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களின் கீழ் ரூ.50 லட்சம் வரை வங்கிக்கடன் பெற் றுத்தருவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் கமிஷன் முன்கூட்டியே தரவேண்டும் என தெரிவித்தார்.
அதை நம்பி 16 பேரும் கடந்த ஆண்டில் பல தவணைகளில் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், இதுவரை அவர் வங்கிக் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தவிட்டார். அதன்பேரில், குற்றப் பிரிவு டி.எஸ்.பி சாரதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், வங்கிக்கடன் வாங்கித்த ருவதாக கூறி, சாம்ராஜ் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், சாம்ராஜ் தலைமறை வானார்.
அவரை குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலை யில், பள்ளி கொண்டாவில் பதுங்கியிருந்த சாம்ராஜை போலீசார் கைது செய்தனர்.
- அடித்து கொலையா? போலீசார் விசாரணை
- அழுகிய நிலையில் கிடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த சின்ன புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்காததால் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பரவமலை வனப்பகுதியில் மரத்தில் சதீஷின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் கிடந்த சதிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமான வாலிபர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் மீட்டனர்
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றிப்பார்ப்பதற்க்காக நேற்று இரவு சென்றுள்ளார்.
சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணா மூர்த்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாய நிலத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
- தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி. கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோட்டை வரை பேரணி நடந்தது.
இதில் மார்பக ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி
ஊர்வலத்திற்கு ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது மருத்துவர்கள் கூறியதாவது:-
மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
உணவுமுறை, உடல் செயல்பாடு மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் போன்றவை பெரும் பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இதன் ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை மற்றும் சுகாதார நெருக்கடியை குறிக்கிறது. மேலும் சமூக, சுகாதார நிபுணர்களின் நடவடிக்கைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.
நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சி.எம்.சி ஊழியர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் மேலாண்மை குழுவின் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- டி.ஐ.ஜி. கடும் எச்சரிக்கை
- வேலூரில் திருட்டு போன 210 செல்போன்கள் மீட்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொலைந்து மற்றும் திருட்டு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்க செல்போன் ட்ராக்கர் என்ற வாட்ஸ் - அப் எண் அறிமுகப்படு த்தப்பட்டது.
இந்த எண்ணின் மூலம் தொலைந்த மற்றும் திருட்டுப் போன செல்போன்கள் கண்டுபிடி க்கப்பட்டு வருகிறது.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜூலை மாதம் 162 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக 40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள் கண்டுபிடிக்க பாடுபட்ட மாவட்ட காவல்துறை, மற்றும் சைபர் கிரைம் போலீசாரை நான் பாராட்டுகிறேன்.
வேலூர் சரகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற்றது உள்ளது. அனைத்து போலீசாரையும் பாராட்டுகிறேன்.
மேலும் கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு போன்ற குற்ற செயல்கள் குறைந்துள்ளது. ஆனால் விபத்துகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. விபத்துகள் ஏற்படாத வண்ணம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் சரகத்தில் 106 இடங்கள் விபத்துகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போக்சோ வழக்குகளில் அக்கறை செலுத்தி வருகிறோம். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது. போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வருகிறேன். இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யின் இமைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. குழந்தைகள் தொடர்பாக வரப்பெறும் மனுக்கள் குறித்து விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.
அவ்வாறு தாமதம் ஏற்படுத்தினாலோ, கட்ட பஞ்சாயத்து செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பனை குறைந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் கள்ளச்சாராம் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். 34 சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரகத்தில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், கவுதமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- 32 பேரல்களில் இருந்து ஆசிட் ஆறாக ஓடியது
- போலீசார் விரைந்து வந்து சாலையில் கொட்டிய ஆசிட்டை அப்புறப்படுத்தினர்
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50),லாரி டிரைவர். இவர் நேற்று இரவு திருப்பூரில் 32 பேரல்களில் ஆசிட் திரவத்தை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்தார்.
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை பாலம் வேலை நடைபெறும் இடத்தில் சென்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது.
சாலையில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத் திண றலால் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாலையில் கொட்டிய ஆசிட்டை அப்புறப்படு த்தினர். கிரேன் உதவியுடன் லாரியைமீட்டனர்.
மீதமிருந்த ஆசிட் பேரல்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்தது
- காளைகள், உழவு மாடுகள், எருமைகள் கொண்டுவரப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பொய்கையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச் சந்தை நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.
உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது.
இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- போலீஸ் சீருடையில் காரை வழி மறித்து துணிகரம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பர்வேஷ் அகமது (வயது 53). இவர், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, பெங்களூரில் விற்பனை செய்து வந்தார்.
கடந்த மாதம் பொருட்களை வாங்க இஸ்மாயிலை தொடர்பு கொண்ட போது, தன்னிடம் இப்போது பொருட்கள் இருப்பு இல்லை.
காட்பாடியைச் சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளும்படி கூறி அவரது செல்போன் எண்ணையும் கொடுத்தார்.
அதன்படி, சங்கரை தொடர்புகொண்டதில், காட்பாடியில் தன்னை சந்திக்கும்படி கூறினார். இதையடுத்து, பர்வேஷ் அகமது தனது காரில் நண்பர் மொஹாஜித் கான் உட்பட 3 பேருடன் கடந்த 7-ந் தேதி வந்து பெங்களூரில் இருந்து வேலுார் வந்து சங்கரை சந்தித்தார்.
அப்போது, "திருவலத்தில் உள்ள குடோனில் பொருட்கள் இருக்கின்றன, அங்கு செல்லலாம் என சங்கர் கூறினார். மேலும், தனது காரிலேயே அழைத்துச்சென்று மீண்டும் காட்பாடியில் விட்டுவிடுவதாக கூறியதாக தெரிகிறது.
இதை நம்பிய பர்வேஷ், தனது நண்பர் மொஹாஜித்கானுடன் சங்கர் காரில் ஏறினார். பின்னர், காரில் வைத்து ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை சங்கரிடம் கொடுத்தார்.
தொடர்ந்து, அம்முண்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட 4 பேர் திடீரென காரை வழிமறித்தனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர், மேலும் இது தொடர்பாக சங்கரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றும், நீங்கள் இருவரும் காரை விட்டு இறங்குங்கள் என்றும் கூறியுள்ளனர்.
அப்போது, பதட்டத்தில் இருந்த பர்வேஷ் அகமது, மொஹாஜித்கான் ஆகியோர் வேகமாக காரை விட்டு இறங்கி, சாலையில் நின்றனர்.
இதையடுத்து, காரில் ஏறி விசாரணை நடத்துவதுபோல் நடித்த அந்த கும்பல் சிறிது நேரத்தில் சங்கருடன் காரில் தப்பியது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் பர்வேஷ் அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 13-ந் தேதி நடக்கிறது
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வேலுார்:
வேலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் வேலுார் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
இவற்றின் உரிமையா ளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து, மீதமுள்ளவை பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
ஏலத்தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீத விற்பனை வரியும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியும் சேர்த்து செலுத்தவேண்டும்.மேலும் இதற்கான ரசீது வழங்கப்படும். அதுவே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.
இவ்வாறு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
- வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்தது
- 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார்.
பல சேவைகள் மையம் மற்றும் விவசாய கட்டமைப்பு நிதி திட்டத்தில் தேவையற்ற உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்றவு கடன் சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்புதல், ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
- கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தபோது பரிதாபம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50), விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (43). தம்பதியினரின் மகன்கள் அஜித்குமார் (24), விஜயகுமார் (22).
அஜித்குமார் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பி செல்ல தயாரானார்.
இந்த நிலையில் அவரது தம்பி விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த சானியை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததால், விஜயகுமார் துடித்தார். இதனைப் பார்த்து அவரது தாய் செந்தாமரை ஓடி சென்று, மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார்.
அப்போது செந்தாமரை மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செந்தாமரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தடை
- பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை சத்துவாச்சாரி பேஸ்-1, 2, 3, 4, 5, அன்புநகர், ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாப் பேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள்.
அதேபோல் தொரப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென் னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு,எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்க ரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.






