என் மலர்tooltip icon

    வேலூர்

    • தீயணைப்புதுறையினர் மீட்டனர்
    • காட்டில் கொண்டுபோய் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனை கவனிக்காத குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய நாகபாம்பை லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். 

    • வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
    • 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன

    வேலூர்:

    வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இரவு மட்டுமல்லாது காலை 9 மணி பனிப்பொழிவு உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போர்வைக்குள் தஞ்ச மடைந்தனர்.

    ஒரு சிலர் சாலையோரங்களில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லார மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர்.

    சென்னையில் இருந்து ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    இதேபோல் காட்பாடி,வள்ளிமலை, பொன்னை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிபொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் வாக னங்களை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டி ருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.

    • குஜராத் மாநிலம் செல்கின்றனர்
    • அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது

    அணைக்கட்டு:

    கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி, ஸ்ரீநகர், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து 3 குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாத இறுதியில் குஜராத் மாநிலம் செல்கின்றனர். தொடர்ந்து, வருகிற 31-ந் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்கின்றனர்.

    இதையொட்டி பெண்களுக்கு அதிகார மளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி சி.ஆர்.பி.எப். பெண் வீரர்கள், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 50 பெண் வீரர்கள் பள்ளிகொண்டா வந்தடைந்தனர்.

    அவர்களுக்கு பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறை, அரசு பள்ளி மாணவிகள், சமுக ஆர்வலர்கள், பேரூராட்சி சார்பில் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேரூராட்சி, துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    • டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
    • ஆலோசனை மற்றும் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு போக்சோ வழக்குகளில் குற்றவாளி களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை களில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    இதில் டி.ஐ.ஜி முத்துசாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குறிப்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் 90 பவுன் நகை திருட்டு போனதை விரைந்து கண்டுபிடித்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி முத்துசாமி தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன்,கிரண் ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் நடந்தது.

    • ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும்
    • பயணிகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்கமாக இயக்க படுகின்றன.

    தினமும் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய ரெயில்கள் நின்று செல்கின்றன.

    ரெயில் நிலையத்தில் ரயில்கள் வரக்கூடிய நேரம் மற்றும் பெட்டிகள் நிற்கும் இடங்கள் குறித்த அறிவிப்புகள் செய்யப்படுகிறது.

    4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஒலிபெருக்கி வசதி இல்லை. இதனால் அந்த பிளாட்பா ரங்களில் நிற்கும் பயணி களுக்கு அறிவிப்பு கேட்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்கள் ரெயில் வருகை குறித்த தகவல் மற்றும் பெட்டிகள் நிறுத்துவது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையத்தில் பிளாட்பா ரங்களில் கூடுதல் ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சா லைகளில் ஏற்படும் தீவிபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி, விழிப்புணர்வு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இதில் ரசாயனங்கள் கையாளுதல், மருந்து கலவை செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல் மற்றும் உற்பத்தி செய்த பட்டாசு மற்றும் தீ பெட்டிகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்து செல்லுதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் அதிகளவில் ரசாயன கலவை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்து வதால் ஏற்படும் உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்படுகிறது. எனவே, மருந்து கலவை செய்து செலுத்தும் பணியில் நன்கு பயிற்சி, அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் தீ விபத்துக்களை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி
    • 33 இடங்களில் சிறப்பு முகாம்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.

    அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

    வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    33 இடங்களில் சிறப்பு முகாம்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.

    அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

    வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    • வேலூர் வி.ஐ.டி.யில் நடக்கிறது
    • அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக்குறளை படிக்க வேண்டும் என்று டால்ஸ்டாய் கூறினார்

    வேலூர்:

    வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் மற்றும் தமிழியக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவி களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

    வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தரும், தமிழியக்க தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    இந்த போட்டியில் 750 மாணவ மாணவிகள் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்கள் இப்போது மாறிவிட்டதை பார்க்கிறேன். தமிழியக்கம் 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது.

    அதில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    1930-களில் காந்தி யடிகள் மாஸ்கோவில் வாழ்ந்து கொண்டிருந்த அறிஞர் டால்ஸ்டாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தாம் இந்தியாவில் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவரது கருத்துக்களை அறிய விரும்பியிருந்தார்.

    டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய பதில் கடிதத்தில் பாராட்டு தெரிவித்துவிட்டு இந்தியாவுக்கு இது புதிதல்ல, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் நாட்டில் ஒரு கவிஞர் தமிழில் எழுதியுள்ளார்.

    அதில் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண, நன்னயம் செய்துவிடல் என்ப தைத்தான் நீங்கள் செய்கி றீர்கள் என்று குறிப்பிட்டி ருந்தார். அதுவரை காந்திக்கு திருக்குறளை பற்றி தெரியாது. அதன்பிறகு திருக்குறளை வாங்கி ஆங்கிலத்தில் படித்துவிட்டு எனக்கு அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக் குறளை படிக்க வேண்டும்' என்று கூறினார்.

    அப்படிப்பட்ட திருக்குறளைத்தான் நீங்கள் ஒப்புவித்து போட்டியில் வென்றிருக்கீறர்கள். இந்தாண்டு 10 மாவட்டங்க ள்தான் போட்டியில் பங்கெடுத்துள்ளன. அடுத்த முறை எல்லா மாவட்டங்க ளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மணிமொழி (வேலூர்), வெற்றிசெல்வி (காஞ்சிபுரம்), தமிழியக்கம் வடதமிழக ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, புலவர் வே. பதுமனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்
    • உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

    அணைக்கட்டு:

    தீபாவளி பண்டிக அடுத்த மாதம் ெகாண்டா டப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் அதிகா ரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் தாசில்தார் வேண்டா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது, கடைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்றும், எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.
    • ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார்.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). ஆடு வியாபாரி.

    இவர் சொந்தமாக ஆடு வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். பெருமாள் ஆடுகளை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து ஆடு தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என செல்போன் எண்ணை பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு ஆடுகள் தேவைப்படுகிறது, ஆடுகளை வேலூருக்கு கொண்டு வந்தால் நேரில் பணம் தருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.

    பாகாயம் அடுத்த ஏ. கட்டுப்படி அருகே லாரி மற்றும் கூலியாட்களுடன் தயாராக இருந்த மர்ம நபர் பெருமாள் கொண்டு வந்த ஆடுகளை அவரது லாரியில் ஏற்றினார்.

    பின்னர் ஆம்பூரில் பணம் தருவதாக கூறி பெருமாளை அழைத்துச் சென்றார். ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குடியாத்தம் பகுதியில் ஆடுகளுடன் லாரி நின்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி வாடகை மற்றும் கூலி ஆட்களுக்கு பணம் தராததால் இந்தப் பகுதியில் காத்து இருக்கிறோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் லாரியுடன் ஆடுகளை மீட்டனர். பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் ஆடுகளை நூதன முறையில் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    • ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடனாக பெற்றேன்
    • தேர்தலில் தோல்வியடைந்ததால் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஏ.டி.எஸ்.பி.க்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன் ஆகியோர் இன்று பொதுமக்களிட மிருந்து மனுக்களை பெற்றனர்.

    சத்துவாச்சாரி ராகவேந்திரா நகரை சேர்ந்த திருநங்கை விஜயபாஸ்கர் சக திருநங்கைகளுடன் வந்து போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டேன்.

    அப்போது தேர்தல் செலவிற்காகவும், எனது சொந்த செலவிற்காகவும் ரங்கா புரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10,65100 கடனாக பெற்றேன். பின்னர்தேர்தலில் தோல்வியடைந்தேன் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்.

    கொடுத்த நபர் தினமும் ஆட்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுகிறார். எனது வீட்டில் என் பாகத்தையும், என் தாயின் பாகத்தையும் தற்சமயம் பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டார்.

    நாங்களும் அவ்வாறு செய்து கொடுத்தோம்.தற்போது நான் ரூ.15 லட்சத்தை அவரிடம் அளித்தேன். இருப்பினும் எங்கள் மேல் பத்திர பதிவு செய்ய மறுக்கிறார். இதனால் போலீசார் என்னுடைய சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ரங்கா புரத்தை சேர்ந்த வினோத் என்ற நபர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு மூலக்கொல்லை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்திற்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த நபர் சொந்தம் கொண்டாடி தகராறு செய்து வருகிறார். பல தடவை நிலத்தை அளந்து கொடுத்தும் மீண்டும் தகராறு செய்கிறார்.

    எங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க்கடலை செடிகளை பறித்து சென்று விட்டார். மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.

    • கலெக்டர் உத்தரவு
    • தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இலவம்பாடி ஊராட்சி தலைவ ராக இருப்பவர் ஜானகிராமன்.

    இலவம்பாடி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு ஒதுக்கும் நிதியை ஜானகிராமன் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் காசோலையில் கையெழு த்திடவும் மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை செய்யும் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டார். மேலும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஊராட்சியில் வழங்கினார். மேலும் காசோலை பண பரிவர்த்தனை செய்யும் உரிமை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (ஊராட்சி நிர்வாகம்) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×