search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gadpadi Railway Station"

    • ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும்
    • பயணிகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்கமாக இயக்க படுகின்றன.

    தினமும் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய ரெயில்கள் நின்று செல்கின்றன.

    ரெயில் நிலையத்தில் ரயில்கள் வரக்கூடிய நேரம் மற்றும் பெட்டிகள் நிற்கும் இடங்கள் குறித்த அறிவிப்புகள் செய்யப்படுகிறது.

    4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஒலிபெருக்கி வசதி இல்லை. இதனால் அந்த பிளாட்பா ரங்களில் நிற்கும் பயணி களுக்கு அறிவிப்பு கேட்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்கள் ரெயில் வருகை குறித்த தகவல் மற்றும் பெட்டிகள் நிறுத்துவது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையத்தில் பிளாட்பா ரங்களில் கூடுதல் ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×