search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் புதியதாக 4 பேருக்கு டெங்கு பாதிப்பு
    X

    வேலூர் மாவட்டத்தில் புதியதாக 4 பேருக்கு டெங்கு பாதிப்பு

    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி
    • 33 இடங்களில் சிறப்பு முகாம்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.

    அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

    வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    33 இடங்களில் சிறப்பு முகாம்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.

    அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

    வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×