என் மலர்
வேலூர்
- வேலூர் வி.ஐ.டி.யில் நடக்கிறது
- அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக்குறளை படிக்க வேண்டும் என்று டால்ஸ்டாய் கூறினார்
வேலூர்:
வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் மற்றும் தமிழியக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவி களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தரும், தமிழியக்க தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:-
இந்த போட்டியில் 750 மாணவ மாணவிகள் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்கள் இப்போது மாறிவிட்டதை பார்க்கிறேன். தமிழியக்கம் 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது.
அதில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
1930-களில் காந்தி யடிகள் மாஸ்கோவில் வாழ்ந்து கொண்டிருந்த அறிஞர் டால்ஸ்டாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தாம் இந்தியாவில் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவரது கருத்துக்களை அறிய விரும்பியிருந்தார்.
டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய பதில் கடிதத்தில் பாராட்டு தெரிவித்துவிட்டு இந்தியாவுக்கு இது புதிதல்ல, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் நாட்டில் ஒரு கவிஞர் தமிழில் எழுதியுள்ளார்.
அதில் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண, நன்னயம் செய்துவிடல் என்ப தைத்தான் நீங்கள் செய்கி றீர்கள் என்று குறிப்பிட்டி ருந்தார். அதுவரை காந்திக்கு திருக்குறளை பற்றி தெரியாது. அதன்பிறகு திருக்குறளை வாங்கி ஆங்கிலத்தில் படித்துவிட்டு எனக்கு அடுத்த பிறவி இருக்கு மானால் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் திருக் குறளை படிக்க வேண்டும்' என்று கூறினார்.
அப்படிப்பட்ட திருக்குறளைத்தான் நீங்கள் ஒப்புவித்து போட்டியில் வென்றிருக்கீறர்கள். இந்தாண்டு 10 மாவட்டங்க ள்தான் போட்டியில் பங்கெடுத்துள்ளன. அடுத்த முறை எல்லா மாவட்டங்க ளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மணிமொழி (வேலூர்), வெற்றிசெல்வி (காஞ்சிபுரம்), தமிழியக்கம் வடதமிழக ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, புலவர் வே. பதுமனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்
- உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
அணைக்கட்டு:
தீபாவளி பண்டிக அடுத்த மாதம் ெகாண்டா டப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் அதிகா ரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் தாசில்தார் வேண்டா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, கடைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்றும், எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.
- ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார்.
வேலூர்:
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). ஆடு வியாபாரி.
இவர் சொந்தமாக ஆடு வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். பெருமாள் ஆடுகளை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து ஆடு தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என செல்போன் எண்ணை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு ஆடுகள் தேவைப்படுகிறது, ஆடுகளை வேலூருக்கு கொண்டு வந்தால் நேரில் பணம் தருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.
பாகாயம் அடுத்த ஏ. கட்டுப்படி அருகே லாரி மற்றும் கூலியாட்களுடன் தயாராக இருந்த மர்ம நபர் பெருமாள் கொண்டு வந்த ஆடுகளை அவரது லாரியில் ஏற்றினார்.
பின்னர் ஆம்பூரில் பணம் தருவதாக கூறி பெருமாளை அழைத்துச் சென்றார். ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குடியாத்தம் பகுதியில் ஆடுகளுடன் லாரி நின்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி வாடகை மற்றும் கூலி ஆட்களுக்கு பணம் தராததால் இந்தப் பகுதியில் காத்து இருக்கிறோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் லாரியுடன் ஆடுகளை மீட்டனர். பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆடுகளை நூதன முறையில் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.
- ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடனாக பெற்றேன்
- தேர்தலில் தோல்வியடைந்ததால் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்
வேலூர்:
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஏ.டி.எஸ்.பி.க்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன் ஆகியோர் இன்று பொதுமக்களிட மிருந்து மனுக்களை பெற்றனர்.
சத்துவாச்சாரி ராகவேந்திரா நகரை சேர்ந்த திருநங்கை விஜயபாஸ்கர் சக திருநங்கைகளுடன் வந்து போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;-
நான் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டேன்.
அப்போது தேர்தல் செலவிற்காகவும், எனது சொந்த செலவிற்காகவும் ரங்கா புரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10,65100 கடனாக பெற்றேன். பின்னர்தேர்தலில் தோல்வியடைந்தேன் மேலும் கடன் கொடுக்க முடியாமல் அவதி அடைந்தேன்.
கொடுத்த நபர் தினமும் ஆட்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுகிறார். எனது வீட்டில் என் பாகத்தையும், என் தாயின் பாகத்தையும் தற்சமயம் பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டார்.
நாங்களும் அவ்வாறு செய்து கொடுத்தோம்.தற்போது நான் ரூ.15 லட்சத்தை அவரிடம் அளித்தேன். இருப்பினும் எங்கள் மேல் பத்திர பதிவு செய்ய மறுக்கிறார். இதனால் போலீசார் என்னுடைய சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ரங்கா புரத்தை சேர்ந்த வினோத் என்ற நபர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு மூலக்கொல்லை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
அந்த நிலத்திற்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த நபர் சொந்தம் கொண்டாடி தகராறு செய்து வருகிறார். பல தடவை நிலத்தை அளந்து கொடுத்தும் மீண்டும் தகராறு செய்கிறார்.
எங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க்கடலை செடிகளை பறித்து சென்று விட்டார். மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
- கலெக்டர் உத்தரவு
- தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இலவம்பாடி ஊராட்சி தலைவ ராக இருப்பவர் ஜானகிராமன்.
இலவம்பாடி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு ஒதுக்கும் நிதியை ஜானகிராமன் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் காசோலையில் கையெழு த்திடவும் மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை செய்யும் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டார். மேலும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் தலையிட முடியாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஊராட்சியில் வழங்கினார். மேலும் காசோலை பண பரிவர்த்தனை செய்யும் உரிமை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (ஊராட்சி நிர்வாகம்) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலுார்:
காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 16 பேர், வேலுார் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், குடியாத்தம் தாலுகா கமலாபுரத்தைச் சேர்ந்த சாம்ராஜ் (வயது 34) என்பவர் மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களின் கீழ் ரூ.50 லட்சம் வரை வங்கிக்கடன் பெற் றுத்தருவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் கமிஷன் முன்கூட்டியே தரவேண்டும் என தெரிவித்தார்.
அதை நம்பி 16 பேரும் கடந்த ஆண்டில் பல தவணைகளில் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், இதுவரை அவர் வங்கிக் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தவிட்டார். அதன்பேரில், குற்றப் பிரிவு டி.எஸ்.பி சாரதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், வங்கிக்கடன் வாங்கித்த ருவதாக கூறி, சாம்ராஜ் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், சாம்ராஜ் தலைமறை வானார்.
அவரை குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலை யில், பள்ளி கொண்டாவில் பதுங்கியிருந்த சாம்ராஜை போலீசார் கைது செய்தனர்.
- அடித்து கொலையா? போலீசார் விசாரணை
- அழுகிய நிலையில் கிடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த சின்ன புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்காததால் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பரவமலை வனப்பகுதியில் மரத்தில் சதீஷின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் கிடந்த சதிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமான வாலிபர் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் மீட்டனர்
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றிப்பார்ப்பதற்க்காக நேற்று இரவு சென்றுள்ளார்.
சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணா மூர்த்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாய நிலத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
- தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி. கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோட்டை வரை பேரணி நடந்தது.
இதில் மார்பக ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி
ஊர்வலத்திற்கு ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது மருத்துவர்கள் கூறியதாவது:-
மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
உணவுமுறை, உடல் செயல்பாடு மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் போன்றவை பெரும் பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இதன் ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை மற்றும் சுகாதார நெருக்கடியை குறிக்கிறது. மேலும் சமூக, சுகாதார நிபுணர்களின் நடவடிக்கைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.
நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சி.எம்.சி ஊழியர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் மேலாண்மை குழுவின் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- டி.ஐ.ஜி. கடும் எச்சரிக்கை
- வேலூரில் திருட்டு போன 210 செல்போன்கள் மீட்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொலைந்து மற்றும் திருட்டு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்க செல்போன் ட்ராக்கர் என்ற வாட்ஸ் - அப் எண் அறிமுகப்படு த்தப்பட்டது.
இந்த எண்ணின் மூலம் தொலைந்த மற்றும் திருட்டுப் போன செல்போன்கள் கண்டுபிடி க்கப்பட்டு வருகிறது.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜூலை மாதம் 162 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக 40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள் கண்டுபிடிக்க பாடுபட்ட மாவட்ட காவல்துறை, மற்றும் சைபர் கிரைம் போலீசாரை நான் பாராட்டுகிறேன்.
வேலூர் சரகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற்றது உள்ளது. அனைத்து போலீசாரையும் பாராட்டுகிறேன்.
மேலும் கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு போன்ற குற்ற செயல்கள் குறைந்துள்ளது. ஆனால் விபத்துகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. விபத்துகள் ஏற்படாத வண்ணம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் சரகத்தில் 106 இடங்கள் விபத்துகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போக்சோ வழக்குகளில் அக்கறை செலுத்தி வருகிறோம். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது. போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வருகிறேன். இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யின் இமைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. குழந்தைகள் தொடர்பாக வரப்பெறும் மனுக்கள் குறித்து விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.
அவ்வாறு தாமதம் ஏற்படுத்தினாலோ, கட்ட பஞ்சாயத்து செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பனை குறைந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் கள்ளச்சாராம் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். 34 சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரகத்தில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், கவுதமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- 32 பேரல்களில் இருந்து ஆசிட் ஆறாக ஓடியது
- போலீசார் விரைந்து வந்து சாலையில் கொட்டிய ஆசிட்டை அப்புறப்படுத்தினர்
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50),லாரி டிரைவர். இவர் நேற்று இரவு திருப்பூரில் 32 பேரல்களில் ஆசிட் திரவத்தை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்தார்.
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை பாலம் வேலை நடைபெறும் இடத்தில் சென்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது.
சாலையில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத் திண றலால் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாலையில் கொட்டிய ஆசிட்டை அப்புறப்படு த்தினர். கிரேன் உதவியுடன் லாரியைமீட்டனர்.
மீதமிருந்த ஆசிட் பேரல்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்தது
- காளைகள், உழவு மாடுகள், எருமைகள் கொண்டுவரப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பொய்கையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச் சந்தை நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.
உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது.
இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.






