என் மலர்
வேலூர்
- கொலையா? போலீசார் விசாரணை
- நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூரோதயன் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் பூரோதயன் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று காலை நிலத்தில் வழியாக சென்றவர்கள் பூரோதயன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூரோதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.
இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் நண்பர்களின் ஏற்பட்ட பிரச்சனையால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் திருவலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். சம்பவத்தன்று பெருமுகை அருகே சர்வீஸ் சாலையில் இரவு 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- வேலூரில் நாளை நடக்கிறது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பிறந்த நாளையொட்டி 2023-24-ம் ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் வேலூரில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் நடத்தப் படும் இந்த போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் 13 வயது, 15 வயது, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையா சிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்றும் அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தும் கலந்து கொள் ளலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படமாட்டாது.
போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர்களை நாளை காலை 6 மணிக்குள் வேலூர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை, சான்றி தழ்கள் வழங்கப்படும்.
4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகள் காட்பாடி அருகிலுள்ள பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேட்டில் நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
- வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை
வேலூர்:
வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
தமிழக அரசு நேற்று முன்தினம் வாகன சாலை வரியை உயர்த்தி உள்ளது.லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் வாகனங்கள் உள்ளன. முன்னறிவிப்பு இல்லாமல் இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு அடுத்தது லாரிகள் மூலம் தான் பொருளாதார மேம்பாடு நடைபெறும்.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தற்போது டீசல் விலை 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது.
அதனை ஏன் குறைக்கவில்லை.தேர்தல் அறிக்கையில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தனர். பெட்ரோல் விலை தான் குறைக்கப்பட்டது.ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.தென் தமிழகத்தில் தான் டீசல் விலை அதிகமாக உள்ளது.
கர்நாடகாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் குறைவாக உள்ளது. தமிழக லாரிகள் கர்நாடகாவில் டீசல் பிடிப்பதால் தமிழக அரசுக்கு தான் வரி இழப்பீடு ஏற்படுகிறது உயர்த்தப்பட்ட வரி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும்.
தொழில் நலிவு
லாரி தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலுக்கு என்று எந்த சலுகை கொடுப்பதில்லை.
இதுவரை எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு வரியை உயர்த்தியது இல்லை.
உயர்த்தப்பட்டுள்ள வானங்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை.அவரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- நுழைவுக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.
இதில் பைக், கார் உள்ளிட்ட 115 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்க ளுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.
மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர்.
ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர். இதனை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டார்.
- தீயணைப்புதுறையினர் மீட்டனர்
- காட்டில் கொண்டுபோய் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனை கவனிக்காத குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய நாகபாம்பை லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
- 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன
வேலூர்:
வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு மட்டுமல்லாது காலை 9 மணி பனிப்பொழிவு உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போர்வைக்குள் தஞ்ச மடைந்தனர்.
ஒரு சிலர் சாலையோரங்களில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லார மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர்.
சென்னையில் இருந்து ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
இதேபோல் காட்பாடி,வள்ளிமலை, பொன்னை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிபொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் வாக னங்களை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டி ருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.
- குஜராத் மாநிலம் செல்கின்றனர்
- அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது
அணைக்கட்டு:
கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி, ஸ்ரீநகர், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து 3 குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாத இறுதியில் குஜராத் மாநிலம் செல்கின்றனர். தொடர்ந்து, வருகிற 31-ந் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி பெண்களுக்கு அதிகார மளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி சி.ஆர்.பி.எப். பெண் வீரர்கள், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 50 பெண் வீரர்கள் பள்ளிகொண்டா வந்தடைந்தனர்.
அவர்களுக்கு பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறை, அரசு பள்ளி மாணவிகள், சமுக ஆர்வலர்கள், பேரூராட்சி சார்பில் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேரூராட்சி, துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
- டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
- ஆலோசனை மற்றும் அறிவுரை
வேலூர்:
வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு போக்சோ வழக்குகளில் குற்றவாளி களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை களில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இதில் டி.ஐ.ஜி முத்துசாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
குறிப்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் 90 பவுன் நகை திருட்டு போனதை விரைந்து கண்டுபிடித்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி முத்துசாமி தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன்,கிரண் ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் நடந்தது.
- ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும்
- பயணிகள் வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்கமாக இயக்க படுகின்றன.
தினமும் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய ரெயில்கள் நின்று செல்கின்றன.
ரெயில் நிலையத்தில் ரயில்கள் வரக்கூடிய நேரம் மற்றும் பெட்டிகள் நிற்கும் இடங்கள் குறித்த அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஒலிபெருக்கி வசதி இல்லை. இதனால் அந்த பிளாட்பா ரங்களில் நிற்கும் பயணி களுக்கு அறிவிப்பு கேட்க முடியாத நிலை உள்ளது.
இதனால் அவர்கள் ரெயில் வருகை குறித்த தகவல் மற்றும் பெட்டிகள் நிறுத்துவது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையத்தில் பிளாட்பா ரங்களில் கூடுதல் ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- கலெக்டர் உத்தரவு
- பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சா லைகளில் ஏற்படும் தீவிபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி, விழிப்புணர்வு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் ரசாயனங்கள் கையாளுதல், மருந்து கலவை செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல் மற்றும் உற்பத்தி செய்த பட்டாசு மற்றும் தீ பெட்டிகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்து செல்லுதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் அதிகளவில் ரசாயன கலவை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்து வதால் ஏற்படும் உராய்வின் காரணமாக பட்டாசு விபத்து ஏற்படுகிறது. எனவே, மருந்து கலவை செய்து செலுத்தும் பணியில் நன்கு பயிற்சி, அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தீ விபத்துக்களை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி
- 33 இடங்களில் சிறப்பு முகாம்கள்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
33 இடங்களில் சிறப்பு முகாம்கள்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.






