என் மலர்tooltip icon

    வேலூர்

    • சாலையில் நிறுத்திவிட்டு சந்தை வளாகத்திற்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அகரம்சேரி அடுத்த காளப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49), கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் பள்ளிகொண்டா சர்விஸ் சாலையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சந்தை வளாகத்திற்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து மகேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
    • திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம்-9442999120, தாசில்தார்கள் வேலூர்-9445000508, காட்பாடி-9445000510. குடியாத்தம்-9445000509, பேர்ணாம்பட்டு-9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
    • ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரை யரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.

    திரையரங்க உரிமை யாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறு வதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கை கள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடை வெளியுடன் உரிய பாது காப்பு நடைமுறை களுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீ றல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்- 9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் - 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி - 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணா ம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரி விக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்
    • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் சார்பனாமேடு பில்டர்பெட் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 35). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஓல்டு டவுனை சேர்ந்த கனி(எ)அருணாச்சலம் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு அப்துல்கரீம் வீட்டிற்கு சென்று அருணாச்சலம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பணம் தர அப்துல்கரீம் மறுக்கவே ஆத்திரமடைந்த அருணாச்சலம், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்துல்கரீம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார்.

    இதுதொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. மணிவண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாச்ச லத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள அருணாச்சலத்திடம் தெற்கு போலீசார் நேற்று வழங்கினர்.

    • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்தது
    • பெயர், விவரம் தெரியவில்லை

    வேலூர்:

    கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காட்பாடி வந்தது.

    அப்போது முன்பதிவு பெட்டியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் காட்பாடி ரெயில்வே போலீசார் சென்று பார்த்தனர். அப்போது 20 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் திருப்பூரில் இருந்து ரெயில் ஏறியதும், ஈரோடு அருகே 2 முறை அபராத தொகை செலுத்தியதும் அதற்கான ரசீது இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவரது பெயர், விவரம் தெரியவில்லை.

    ரோஸ் நிற சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டு அணிந்திருந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

    இறந்த வாலிபர் பீகாரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அவர் ஏறியுள்ளார். இது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

    ரெயிலில் ஏறும்போது சகஜமாக ஏறியுள்ளார். எனவே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் என பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே தெரியவரும் என்றனர்.

    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால் வாக்குவாதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் சின்ன சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகு மார் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஹரிப்பிரியா. சாந்தகுமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்வதாகவும், அதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாந்தகு மார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் கோப மடைந்த ஹரிப்பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாந்தகு மாரை திட்டி உள்ளார்.

    இதில்மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியால் சுட்டு தூக்கி சென்றனர்
    • மேய்ச்சலுக்காக சென்றது வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குச்சி பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் குலதெய்வ வழிபாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளாக பன்றி ஒன்றை வளர்த்து வருகிறார்.

    பன்றியை தினமும் காலை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மாலை கயிற்றால் கட்டி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பன்றியை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டார். வெகு நேரமாகியும் பன்றி மாலையில் வீடு திரும்பவில்லை.

    அதனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது பன்றியை சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை எடுத்துச் சென்றதாக கூறினர். சந்தேகம் அடைந்த மணி தனது உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது பன்றியை கொன்றதற்கான தடயம் இருந்தது.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் மணி புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம் செய்யப்படும்
    • மின் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் துணை மின் நிலையம், இறைவன்காடு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபிச ர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கிருஸ்ணாநகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்கா நத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஒல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி ரோடு அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், மற்றும் விரிஞ்சிபுரம், பொய்கை, இறைவன்காடு, செதுவாலை, வல்லண்ட ராமம், கந்தனேரி, கழனிபாக்கம் மருதவல்லி பாளையம். அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    ஆற்காடு துணை மின் நிலையம், மாம்பாக்கம் துணை நிலையம், பூட்டுத்தாக்கு மற்றும் கத்தியவாடி துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஹவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணா வரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம். ரத்தினகிரி, கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், கன்னிகபுரம், சனார்பண்டை, மேல குப்பம், கிழ்செங்கநாத்தம் மேல்செங்கநாத்தம்.

    மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • போதையில் மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1000 எடுத்து சென்றார்
    • போலீசில் புகார்

    வேலூர்:

    காட்பாடி தாலுகா கழிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 43). கட் டிட மேஸ்திரி. இவர் சம்பவத் தன்று காகிதப்பட்டறையில் நடந்து சென்றபோது, வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணேசன் மகன் மணி (வயது 24) என்பவர் போதையில் தேவேந்திரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துச்சென்று விட்டார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத் தில் தேவேந்திரன்' புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணியை கைது செய் தனர். மேலும் அவரிடமிருந்த 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • அவருடைய கையில் ஆங்கில எழுத்தால் பச்சை குத்தப்பட்டிருந்தது
    • கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது. அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.

    ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். வேலூர் மாநகரின் முக் கிய பகுதியாக திகழும் கோட்டையில் தற்கொலை, வழிப்பறி, கொலை நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை
    • வெறிநாய்கள், பன்றிகள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வேண்டும்

    வேலூர்;

    காட்பாடி 14-வது வார்டு பகுதியில் இதுவரை எந்த வித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் ரங்கநாதன், செயலாளர் கணேஷ், துணைத் தலைவர் கண்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    ராதாகிருஷ்ணா நகர் பகுதியில் சாலை வசதி, கழிவு நீர், கால்வாய், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் மாடுகள், காளைகள் வெறிநாய்கள், பன்றிகள் போன்றவைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்களை எழுப்பினர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா
    • வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது

    வேலூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த விழாவை காணவும், ஏழுமலையானை தரிசனம் செய்யவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

    வேலூர் மண்டல அரசு போக்குவரத்து க்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து தற்போது திருப்பதிக்கு 10 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் வருகிற 23-ந்தேதி மாலை வரை இயக்கப்பட உள்ளன என்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×