என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீடு புகுந்து டீக்கடைகாரரை வெட்டிய ரவுடி கைது
- அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்
- போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் சார்பனாமேடு பில்டர்பெட் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 35). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஓல்டு டவுனை சேர்ந்த கனி(எ)அருணாச்சலம் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு அப்துல்கரீம் வீட்டிற்கு சென்று அருணாச்சலம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பணம் தர அப்துல்கரீம் மறுக்கவே ஆத்திரமடைந்த அருணாச்சலம், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்துல்கரீம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார்.
இதுதொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.
இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. மணிவண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாச்ச லத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள அருணாச்சலத்திடம் தெற்கு போலீசார் நேற்று வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்