என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகாளய அமாவாசையை முன்னிட்டு வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள காரிய மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தவர்களை படத்தில் காணலாம்.
மகாளய அமாவாசை தர்ப்பணம்
- வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
- ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்
வேலூர்:
மகாளய அமாவாசை யொட்டி இன்று ஏராள மானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.
பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோ ர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.
மகாளய அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






