search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of accident"

    • குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது.
    • வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ளது எஸ்.ஆர்.சி. மில். தற்போது எஸ்.ஆர்.சி. மில்லில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சாலையில் திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு ஊத்துக்குளி வழியாக செல்லும் ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து மிகுதியான பகுதியாகும். இப்படிப்பட்ட நிலையில் இந்த பாலத்தின் அடியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் இரும்பு பைப் சாலையின் மேல்மட்டம் வரை வெளியே தெரியும்படி உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தின் தார் சாலை, வாகன போக்குவரத்து செல்ல செல்ல சிறியதாக பள்ளம் காணப்பட்டு, நாளடைவில் மரண பள்ளமாக மாறி விட்டது. இதனை அறியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வந்து, அந்த பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் உடலில் சீராய்ப்பு, ரத்த காயம் ஏற்படுகிறது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அந்த சாலையின் பள்ளத்தில் விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழை காலத்தில் அந்த இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மேலும் அதிக அளவில் விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
    • 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன

    வேலூர்:

    வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இரவு மட்டுமல்லாது காலை 9 மணி பனிப்பொழிவு உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போர்வைக்குள் தஞ்ச மடைந்தனர்.

    ஒரு சிலர் சாலையோரங்களில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லார மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர்.

    சென்னையில் இருந்து ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    இதேபோல் காட்பாடி,வள்ளிமலை, பொன்னை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிபொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் வாக னங்களை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டி ருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.

    • சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. தற்போது, அது நான்கு வழிசாலையாக மாறியுள்ளதால், வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கென தனிப்பாதை ஏதும் அமைக்கப்படவில்லை.

    பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடையும் அமைக்கப்படவில்லை. மேலும், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    சாலையிலிருந்து பள்ளிக்கு செல்லும் நுழைவு பாதை 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளமாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களிலேயே நிறுத்தக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மற்றொரு நுழைவு பாதையில் 10-அடி ஆழமான சாக்கடை குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். செங்குத்தாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். 10-அடி ஆழமுள்ள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென, மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது.
    • திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

    வெள்ளகோவில்:

    கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றிற்கு தடுப்பு சுவர் இல்லை .அதற்கு பதிலாக தற்காலிகமாக தகரத்தாலான தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு வைக்கப்பட்டு இருப்பதால் இரவு நேரங்களில் இருபுறமும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமில்லாமல் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது

    இந்த சாலையின் வழியாக திருப்பூர், கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் கிழக்கு மார்க்கமாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். ஆகையால் உடனே இந்த பிரதான சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தடுப்பான்களை அகற்றி பாதுகாப்பான நிலையில் கிணற்றின் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தகவல்
    • விபத்து நடந்த இடத்தில் ஆய்வு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் மூலம் விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெக்குந்தி என்ற இடத்தில் ஒரு வங்கியின் துணை மேலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விபத்திற்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், அப்பகுதி பொதுமக்களிடமும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் மற்றும் வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்டது
    • சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இப் பகுதியில் ஊராட்சி ஒன்றி யம், வேளாண்மை அலுவல கம், பத்திர பதிவு அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற் றும் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளன. இத னால் பஜார் வீதி, பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண் டப்பட்டன. ஆனால் பள்ளம் தோண்டிய பிறகு சாலை பணிகள் நடைப்பெறவே இல்லை. இதனால் பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி, கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள தண்ணீரில் மீன் வளர்ந்து இருப்பதால்பொது மக்கள் தூண்டில் மற்றும் வலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

    மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இப்பகுதி யில், போதிய தடுப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டி கள் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள், அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாலை பணி களை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×