search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் சாலையில் பாதுகாப்பற்ற தகர தடுப்புகளால் விபத்து அபாயம்
    X

    வெள்ளகோவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தகர தடுப்புகளை படத்தில் காணலாம். 

    வெள்ளகோவில் சாலையில் பாதுகாப்பற்ற தகர தடுப்புகளால் விபத்து அபாயம்

    • கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது.
    • திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

    வெள்ளகோவில்:

    கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றிற்கு தடுப்பு சுவர் இல்லை .அதற்கு பதிலாக தற்காலிகமாக தகரத்தாலான தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு வைக்கப்பட்டு இருப்பதால் இரவு நேரங்களில் இருபுறமும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமில்லாமல் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது

    இந்த சாலையின் வழியாக திருப்பூர், கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் கிழக்கு மார்க்கமாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். ஆகையால் உடனே இந்த பிரதான சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தடுப்பான்களை அகற்றி பாதுகாப்பான நிலையில் கிணற்றின் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×