search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    காவேரிப்பாக்கம் நெடுஞ்சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ள காட்சி.

    காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

    • நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்டது
    • சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இப் பகுதியில் ஊராட்சி ஒன்றி யம், வேளாண்மை அலுவல கம், பத்திர பதிவு அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற் றும் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளன. இத னால் பஜார் வீதி, பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண் டப்பட்டன. ஆனால் பள்ளம் தோண்டிய பிறகு சாலை பணிகள் நடைப்பெறவே இல்லை. இதனால் பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி, கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள தண்ணீரில் மீன் வளர்ந்து இருப்பதால்பொது மக்கள் தூண்டில் மற்றும் வலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

    மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இப்பகுதி யில், போதிய தடுப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டி கள் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள், அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாலை பணி களை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×