என் மலர்
நீங்கள் தேடியது "The supply of cows was seen increasing"
- ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்தது
- காளைகள், உழவு மாடுகள், எருமைகள் கொண்டுவரப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பொய்கையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச் சந்தை நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.
உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது.
இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.






