என் மலர்
நீங்கள் தேடியது "குடித்துவிட்டு அடிக்கடி தகராறு"
- குடும்ப தகராறில் விபரீதம்
- அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) இவருடைய மனைவி அஞ்சலி (வயது 38) இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த சில மாதங்க ளாகவே கணவர் வசந்தகுமார் மனைவி மீது சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனையடுத்து நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று விடியற்காலையில் வீட்டில் உள்ள குளியலறையில் அஞ்சலி தன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததை கண்டு இவரது உறவினர்கள் வந்து பார்த்த போது அஞ்சலி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






