என் மலர்
வேலூர்
- போக்குவரத்து பாதிப்பு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து ெசன்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் இருந்து அமிர்தி செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்னாத்தூர் அமிர்தி சாலையை சீரமைக்க கோரியும் புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தி நஞ்சு கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்குப் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.தொடர்ந்து சாலை மோசமாகவே நீடித்து வருகிறது.
இதில் நிலையில் நேற்று நஞ்சு கொண்டாபுரம் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுக்கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வேலூரில் இருந்து அமிர்தி செல்லும் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவவறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் கன்னியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் நடந்தது
- 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மூன்றாம் பரிசாக 50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஹைதராபாத் ஆர்டிஐ, பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே கே அகாடமி கேரளா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூர் நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட சிறந்த அணிகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
- குடியாத்தம், அணைக்கட்டில் உள்ள கோவில்களில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவர் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகள் வீதிஉலா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், கே.எம்.ஜி கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, விழா குழுவைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, பி.ஈஸ்வரவேல், டி சங்கரலிங்கம், வி. பிச்சாண்டி, எம்.கே.கணபதி, ஆடிட்டர் கிருபானந்தம் உள்பட குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சிவவிடை கைங்கரிய சங்கத்தின் சார்பில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கைலாசநாதர் கோவில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் கோவில், ஒடுகத்தூர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- ரூ. 2 லட்சம் தந்தால் தான் சுரேஷை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
- வேலூர் வடக்கு போலீஸ் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பன மடங்கியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28) கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக பைக்கில் வேலூர் வந்தார்.
கொணவட்டம் அருகே வந்தபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றனர்.
அங்கு வைத்து அவரது செல்போனை பறித்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க கும்பல் திட்டமிட்டனர். அதன்படி சுரேஷின் செல்போனில் இருந்து அவருடைய வீட்டிற்கு பேசினர்.
ரூ. 2 லட்சம் தந்தால் தான் அவரை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
சுரேஷின் குடும்பத்தினர் இது குறித்து அதை ஊரைச் சேர்ந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கூட்டாக கும்பல் கூறிய இடத்திற்கு வந்தனர். அவர்களை கண்டதும் சுரேஷை விட்டுவிட்டு கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.33.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
- கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை எந்திரம் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
39 விசை உழுவை இயந்திரம் வழங்க ரூ.33.15 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேற்படி விசை உழுவை இயந் திரம் சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி. விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசா யிகள் திருப்பத்தூர் உதவி செயற்பொறியாளர், வேளாண் மைப்பொறியியல்துறை, சிவசக்திநகர், புதுப்பேட்டைரோடு, திருப்பத்தூர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடைலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
- பூட்டைஉடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சேதம் அடைந்த மேைஜ, நாற்காலிகள் அங்குள்ள வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று வகுப்புகள் முடிந்து வழக்கம் போல் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர்.
இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் அங்குள்ள அறையின் பூட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜை, நாற்காலிகள் திருடு போனதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
- அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். இதேபோல் பெயர் நீக்கல் முகவரி மாற்றத்திற்கும் மனு அளித்து இருந்தனர்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது வாக்குச்சாவடி அலுவலர்கள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதையடுத்து வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை முடித்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இைதயடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வெளியிட்டார். வெளியி டப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
மனு அளித்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரி பார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,22,140 ஆண் வாக்காளர்களும், 1,31, 821 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என 2,54,002 பேர் உள்ளனர். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 1,18, 636 ஆண் வாக்காளர்களும், 1,27,261 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 35 என 2,45, 932 பேர் உள்ளனர்.
அணைக்கட்டு தொகுதியில் 1,24,055 ஆண் வாக்காளர்களும், 1,31,774 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என 2,55, 859 பேர் உள்ளனர். கே. வி.குப்பம் தொகுதியில் 1,11,357 ஆண்களும், 1,16, 268 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என 2,27,638 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,40,642 ஆண்களும், 1,50,355 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேர் என 2,91,040 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,16,830, பெண் வாக்காளர்கள் 6,57,479, மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேர் என மொத்தம் 12,74,466 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 41 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
- குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தல்
- போக்குவரத்து பாதிப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லாபாறை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அன்றாட பயன்படுத்தும் குடிநீருக்காக ஆங்காங்கே இருக்கும் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒருமாத காலமாக குடிநீர் இல்லை எனவும், குடிநீரை சீராக வழங்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை 7 மணிக்கு கொட்டும் பணியிலும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஓரிரு நாட்களில் சரிசெய்து தருவதாக கூறி உறுதி அளித்த பின்னர் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
- ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி
- 2 மணிக்குள் முடிக்க வேண்டும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை https://forms.gle/GDWNspXeNc1DfW4r8 என்ற ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.
விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நாளை 06.01.2023 மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்படும். இணைய தளத்தில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்தப்பட வேண்டும். 09.01.2023 அன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சம்மந்தப்பட்ட விழாக்குழுவினர் விழா நாளுக்கு 15 நாட்கள் முன்னதாக விண்ணப்பப்படிவம், காப்பீடு செய்யப்பட்டதற்கான ஆவணம், ரூ.10,000-க்கான வரைவோலை, பிரமாண பத்திரம் ஆகியவற்றுடன் கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி விண்ணப்பத்துடன் விழாவில் பங்கேற்கும் அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை மற்றும் காளைகளின் பட்டியல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விழா நடைபெறும் இடம் திறந்தவெளி மைதானமாகவும். குடியிருப்புகளுக்கு தொலைதூரத்தில் உள்ளதாக அமைந்துள்ள திடலினை தேர்வு செய்து அந்த திடலின் வரைபடத்தை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநரிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
ஓடு தளம் முடியுமிடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட வேண்டும்.
இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பேனர்கள் வைக்கப்பட வேண்டும். காளைகளுக்கு தேவையான அளவு தங்குமிடம், தண்ணீர் வசதி மற்றும் தீவண வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு காளைகளுடனும் அந்த காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.
செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளை களுக்கு அனுமதியில்லை. விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அரசு அலுவலர்களுக்கு உரிய முறையில் உணவு,
குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். விழா தளத்தில் ஒலிபெருக்கிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கேமராவோ அல்லது வெப் கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். விழாவினை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.
இது தவிர மாவட்ட நிர்வாகம் நிலைமைகளுக்கேற்ப பிறப்பிக்கும் உத்தரவுகளை கடைபிடித்து விழா நடத்த தெரிவிக்கப்படுகிறது.
உரிமையாளர்கள் காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.
விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும்.
ஓடு பாதையின் இறுதியில் காளைகளை பாதுகாப்பாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 1 ½ கிலோ பறிமுதல்
- வியாபாரி கைது
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கஞ்சா வியாபாரிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
அதில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 10 பேரை கூட்டாளிகளாக வைத்துக்கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.
அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கியமான வியாபாரியை தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சுரேஷ்குமார், பிரபு, கணேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் குடியாத்தம் அருகே பெரும்பாடு ரோடு சேங்கண்டியம்மன் கோவில் அருகே கஞ்சா வியாபாரியை கைது செய்தனர். அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த காலவபல்லி கிராமத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
- டி.ஐ.ஜி, எஸ்.பி மனுக்களை பெற்றனர்
- ஆலோசனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைவு முகாம் இன்று காலை நடைபெற்றது.முகாமிற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அந்த மனுவில் தனது சொந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க அருகில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், அண்ணா கலையரங்கம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்புகளை லாரியில் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கரும்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பலர் பாதிப்படைகின்றனர்.எனவே சற்று தொலைவில் பெரியார் பூங்கா அருகே அவர்கள் கரும்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களையும், சம்பந்தப்பட்ட கரும்பு வியாபாரிகளும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
- மணல் விலை குறைக்க வலியுறுத்தல்
- மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அரும்பருத்தி கிராமத்தில் தமிழக அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இங்கு அள்ளப்படும் மணல் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் அரசு மணல் விற்பனை கிடங்கில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.
அதன்படி ஒரு மாட்டு வண்டிக்கு மணல் விலை ரூ.800 வரிகள் உட்பட செலுத்த வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாட்டுவண்டி தொழிலா ளர்கள் மணல் அள்ள மாட்டு வண்டியுடன் குவாரிக்கு சென்றனர்.அப்போது ரூ.800 உயர்த்தப்பட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தத் தொகை அதிகமாக உள்ளதாக கூறி மாட்டுவண்டி தொழிலா ளர்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீசார் மணல் குவாரிக்கு சென்று மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.உயர்த்தப்பட்ட தொகையை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.






