search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி குடியாத்தத்தில் விற்பனை
    X

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி குடியாத்தத்தில் விற்பனை

    • 1 ½ கிலோ பறிமுதல்
    • வியாபாரி கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கஞ்சா வியாபாரிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    அதில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 10 பேரை கூட்டாளிகளாக வைத்துக்கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.

    அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கியமான வியாபாரியை தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சுரேஷ்குமார், பிரபு, கணேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் குடியாத்தம் அருகே பெரும்பாடு ரோடு சேங்கண்டியம்மன் கோவில் அருகே கஞ்சா வியாபாரியை கைது செய்தனர். அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த காலவபல்லி கிராமத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    Next Story
    ×