search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullock cart workers"

    • மணல் விலை குறைக்க வலியுறுத்தல்
    • மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அரும்பருத்தி கிராமத்தில் தமிழக அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இங்கு அள்ளப்படும் மணல் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் அரசு மணல் விற்பனை கிடங்கில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    அதன்படி ஒரு மாட்டு வண்டிக்கு மணல் விலை ரூ.800 வரிகள் உட்பட செலுத்த வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாட்டுவண்டி தொழிலா ளர்கள் மணல் அள்ள மாட்டு வண்டியுடன் குவாரிக்கு சென்றனர்.அப்போது ரூ.800 உயர்த்தப்பட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

    இந்தத் தொகை அதிகமாக உள்ளதாக கூறி மாட்டுவண்டி தொழிலா ளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து போலீசார் மணல் குவாரிக்கு சென்று மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.உயர்த்தப்பட்ட தொகையை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

    விழுப்புரம் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீராமூர் ஏரியில் இன்று அதிகாலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சிலர் அனுமதி பெறாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போலீஸ் காரர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். அவர்கள் விலங்குகள் மீது துப்பாக்கிசூடு நடத்த மாட்டார்கள். இதில் 90 சதவீதம் போலீசார் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த பகுதியில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட வேட்டைக்காரர்களை கொண்டு துப்பாக்கியால் சுட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×