என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பித்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் ஒருவார காலத்திற்கு தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.02 மணி முதல் நாளை (புதன்கிழமை) மாலை 5.36 வரை மலையை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.
இதனால் பவுர்ணமி கிரிவலத்துக்கு வரவேண்டாம் என பக்தர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தச்சம்பட்டு புதூரை சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மகன் திருத்ராஜ் (வயது40) மீன் வியாபாரி. இவர் கோழிப்பண்ணையும் வைத்திருந்தார்.
திருத்ராஜ் அங்குள்ள ஒருமாடி வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவரிடம் மீன் வாங்க வந்த சிலர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது திருத்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டு மாடியில் இருந்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருத்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ?என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு திருத்ராஜ் வீட்டிற்கு யாராவது சென்றார்களா? மேலும் முன்விரோதிகள் யாரும் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தச்சம்பட்டு புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆரணி நகரில் காலை 10 மணிக்கு பிறகும் சாலைகளில் எப்போதும் போல இரு சக்கர வாகனங்களிலும், கார், வேன்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
இ-பதிவு இல்லாமல் வாகனங்கள் செல்வதை துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேலு, தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் குமரவேலு, மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணித்து இ- பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரிக் கடைகள், பிரின்டிங் பிரஸ் உள்ளிட்ட 15 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பழைய பஸ் நிலையம் அருகே காரணமின்றி வாகனங்களில் சுற்றி வந்த இளைஞர்களை போலீசார் நிறுத்தி அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, உறுதிமொழியும் எடுக்க செய்தனர்.






