என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஜமுனாமரத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி பிளஸ்-2 வரை படித்து விட்டு டிப்ளமோ சித்தா முடித்தவர் என்பதும் வீட்டிலேயே கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போளூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், ஜமுனாமரத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 40) என்பதும், அவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு டிப்ளமோ சித்தா முடித்தவர் என்பதும் வீட்டிலேயே கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

    மேலும் அங்கு மருந்து, மாத்திரை, ஊசி போன்றவை இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கிருஷ்ணவேணியை ஜமுனாமரத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர்.
    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் திருவண்ணாமலை மக்களிடமும், கிரிவலம் சென்ற பக்தர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆதிசே‌ஷன் நகரை சேர்ந்தவர் ராதா (வயது41). இவர் நேற்று மாலை கிரிவலப்பாதையில் ரமணாசிரமம் செல்லும் வழியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் சென்று வழிபட்டார்.

    இரவு7.30 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக அக்னி தீர்த்தக்குளம் அருகில் அமைந்துள்ள டீக்கடைகள் இருக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மின் விளக்கு எரியாததால் இருட்டாக இருந்தது.

    இதனை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதா அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தார். அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி சென்றுவிட்டார். தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றதால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார்.

    சம்பவ இடத்திற்கு வந்த ராதாவின் உறவினர்கள் அவருக்கு உடனடியாக மஞ்சள் கயிறு அணிவித்தனர். அருகில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து குங்குமம் எடுத்து அவரது நெற்றியில் வைத்தனர். இதுபற்றி ராதா டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தது. செயின் பறிப்பு நடந்த இடத்தில் கண்காணிப்புகேமரா இருப்பதால் அதன் காட்சிகளை பார்த்து செயின் பறித்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் திருவண்ணாமலை மக்களிடமும், கிரிவலம் சென்ற பக்தர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிரிவலப்பாதையில் இதே போன்று அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. கடந்த வாரம் எமலிங்கம் பகுதியில் கிரிவலம் சென்ற ஒரு இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. இதில், 50 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 635 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் வருகை தருவார்கள்.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    16-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.51 மணிக்கு நிறைவடைகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமிகிரிவலம் நாட்களான நாளை, நாளை மறுநாள் மலைச் சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

    தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மேற்பார்வையில் நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    காஞ்சிபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மனைவி பாஞ்சாலை (வயது 60). இவர், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

    இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, விஷ பூச்சிகள் கடித்து இருக்கலாம் என கருதி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஞ்சாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 88 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

    நேற்று வரை 980 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து உள்ளனர். 628 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    செங்கம்:

    செங்கம் வனத்துறை அலுவலர்கள் பிஞ்சூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 25), சரண்ராஜ் (26), பி.எல்.தண்டா பகுதியை சேர்ந்த பழனி (24) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட சென்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த காதல்ஜோடி, வந்தவாசியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி பூங்காவில் பொதுமக்கள் தினமும் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி சென்று வருகின்றனர். வழக்கம்போல நேற்றுமாலை பொதுமக்கள் நடை பயிற்சி சென்றனர். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள மரத்தடியில் ஒரு இளம் பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்தது. அந்த செல்போன்கள் மூலம் போலீசார் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

    செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பரத் (வயது 20). இவரும், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அக்‌ஷயா (19) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

    அதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி பூங்காவுக்கு வந்துள்ளனர். அங்குவைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி ஆசிரியர் பலியானார். மகளை கல்லூரியில் சேர்க்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    திண்டிவனம்:

    திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). இவர், அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

    இவரது மகள் யாசினி(வயது 24). இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டார். அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள்(29) என்பவர் காரை ஓட்டினார்.

    செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள ராகவேந்திரா கோவில் அருகில் அதிகாலை 4 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடல் நசுங்கி ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். யாசினி, அருள் ஆகிய 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    விபத்து பற்றி அறிந்ததும் ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி பெரிய கடைவீதியில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    ஆரணி:

    ஆரணி நகராட்சி நிர்வாகமும், எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் முன்னிலையில் டாக்டர் முரளி மேற்பார்வையில் ஆரணி பெரிய கடை வீதியில் உள்ள காய்கறி வியாபாரிகள், பெட்டி கடை வியாபாரிகள், செல்போன் கடை மற்றும் பல்வேறு வியாபாரம் செய்வோருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

    நகராட்சி களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா, காய்ச்சல் வந்தவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள்? என விவரங்களை கேட்டறிந்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். காய்ச்சல் உள்ளவர்களை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வடமாதிமங்கலம், தச்சாம்பாடி ஆகிய 6 கிராமங்களில் 786 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    போளூர்:

    போளூரை அடுத்த பெலாசூர், கூடலூர், திருமலை, கொம்மனந்தல், வடமாதிமங்கலம், தச்சாம்பாடி ஆகிய 6 கிராமங்களில் நேற்று 786 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் 349 பேர் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர், 437 பேர் 45 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர் என தாசில்தார் சாப்ஜான் தெரிவித்தார்.
    ×