என் மலர்
திருப்பத்தூர்
- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
- உதயேந்திரம் பேரூராட்சி பள்ளியில் நடந்தது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.
- கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் ஊராட்சியில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கீதா பாரி (ஆலங்காயம்), சுரேஷ் குமார் (மாதனூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி சப் - கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.
முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித் தொகை, களை எடுக்கும் கருவி, உளுந்து விதை, ஊட்டசத்து பெட்டகம், வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 578 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா (இளையநகரம், காந்திமதி (மேல்குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் சம்பங்கி, கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.
- மனைவி உள்பட 2 பேர் கைது
- கணவன்- மனைவிக்கு இடையே தகராறு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் யாழரசன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவரது 2-வது மனைவி பிரதீபா (39). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்க ளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாழரசன் பிரதீ பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு பிரதீபா சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் யாழரசன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மனைவி பிரதீபாவிடம் இங்கு ஏன் வந்தாய் என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரதீபாவின் அண்ணன் திருப்பதி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று யாழரசிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது அண்ணன் திருப்பதி ஆகியோர் சேர்ந்து அருகே இருந்த கட்டையை எடுத்து யாழரசனை சரமாரியாக தாக்கினர்.
இதில் யாழரசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் யாழரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீபா மற்றும் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் பேச்சுவார்த்தை
- உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஏடிஎஸ் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் 40 வருடமாக சுடுகாடு இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக புதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்வது வந்தனர்.
இந்த நிலையில் ஏடிஎஸ் காலனியை சேர்ந்த முருகன் (வயது 62). தொழிலாளி என்பவர் உடல்நல குறைவால் இறந்து விட்டார்.
அவரை புதைப்பதற்காக புதூரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு புதைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏடிஎஸ் காலனியை சேர்ந்த பகுதி மக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே பாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா ண்டேஸ்வரி என்பவர் தனது வீட்டின் அருகே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே தோழர் கவுண்டர் தெருவில் கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் பின்புறம் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்று கொண்டு வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் 2 பாம்புகளை விட்டனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே காதர்பேட்டை கவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகன் அம்ஜத் பாஷா (வயது 29) இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அம்ஜத் பாஷா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ஜத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்
- டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது
ஆம்பூர்:
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடை கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி செல்கின்றனர்.
பனிபொழிவால் அப்பகுதியில் உள்ள மலைகளை சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.
மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகிறார்கள்.
சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.
பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்தி விட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்ப டுகிறார்கள்.
பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக மாகவே காணப்படுகிறது.
- ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது
- மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது
ஜோலார்பேட்டை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய பேச்சு போட்டிகள் தனித்தனியே நடந்தது.
இதில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் வேல்முருகன் காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ரவி உதவி தலைமை ஆசிரியை எஸ். அருள்செல்வி, முதுகலை ஆசிரியை ஆர். சாய்ரா பானு, முதுகலை ஆசிரியர் ஸ்ரீ மாதேஷ், உடற்கல்வி ஆசிரியர் எம். மதன்குமார், தமிழ் ஆசிரியர் சி. மாதேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- தீயணைப்புத் துறை சார்பில் விளக்கம்
- மாணவிகள் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவ லர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பருவ மழையை முன்னிட்டும், தீவிபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- எம்.எல். ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன் தொடங்கி வைத்தனர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியில் ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் தலைமை யில் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி கலந்து கொண்டு கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
பின்னர் கிரிசமுத்திரம் ஊராட்சியில் முதல் அமைச்சர் கிராம புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் கிரிச முத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, சம்பந்திகுப்பம், புருஷோத்த குப்பம் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் சித்ரா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிர பாகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- காவலாளி கைது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ பெத்த லேகம் பகுதியைச் சேர்ந்தவர் ராசித்தா (வயது 28). ஆசனம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ராஜாசேகரன் (38). காவலாளி.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசித்தாவிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி தருமாறு ராஜசேகரிடம், ராசித்தா கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், ராசித்தாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை ராஜசேகரன் கைது செய்தனர்.
- பொதுமக்கள் தர்ணா-பரபரப்பு
- ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம்,, வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியில் பொதுமக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். நீர்பிடிப்பு பகுதியான ஏரி கால்வாயில் அவர்கள் வீடுகள் கட்டி உள்ளதால், மழை நீர் ஏரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை நீடித்தது.
இதில் கடந்த 2022-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20-ந் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம், ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை இடித்து அகற்றினர்.
இதில் வீடுகளை இழுந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்ப ட்டுள்ளது.
மிதமுள்ள 41 குடும்பத்தினர்கள் இலவச வீட்டு மனை வழங்க கோரி அரசு அதிகாரிகளிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வாணியம்பாடி சப்- கலெக்டர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சப்- கலெக்டர் பிரேமலதா விரைந்த சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மாதத்திற்குள் இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






