என் மலர்
திருப்பத்தூர்
- நீட் தேர்வுக்கு எதிராக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்
- ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனது கையெழுத்திட்டு, நீட் க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொது மக்கள், மாணவர்கள், திமுக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.
பின்னர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்.ஞானவேலன் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு மற்றும் பணமுடிப்பு என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அவைத் தலைவர் ராமநாதன், துணை செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பொன்னம்பலம், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- கிராம மக்கள் பீதி
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது.
இதில் முருகன் குட்டை மற்றும் கீழ் குட்டை கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கீழ் குட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்துக் குதறியது. அதேபோல் நேற்று இரவும் முருகன் குட்டை பகுதியில் நுழைந்த சிறுத்தை பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை கடித்து குதறியுள்ளது.
ஆடுகளை சிறுத்தை கடித்து குதறும் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடம் காட்டு தீப்போல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் அச்சைமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
- 50 பவுன் நகை அபேஸ்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த தாயப்பன்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) ஸ்டூடியோ உரிமையாளர். இவரது மனைவி ரம்யா (32) . இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் டைப்பிஸ்டாக உள்ளார்.
இவர்கள் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றனர். அன்று மாலை பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மர்ம கும்பலை பிடிக்க எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.
அதன் பேரில் நேற்று தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையலறை யில் 47 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரம்யாவிடம் விசாரித்தபோது, நாங்கள் திருமணத்திற்கு சென்று விட்டு வந்து இந்த நகை களை சமையலறையில் வைத்திருந்ததாக கூறினார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகள், பணம் திருட்டுபோனதாக தெரிவித்தார்.
இதையடுத்து நகை திருடியவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர்.
மேலும் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- திருப்பத்தூர் சாலை விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர் ஏட்டு முரளி.
- மீட்பு பணி முடிந்து வாணியம்பாடி வந்த அவர், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
திருப்பத்தூர்:
ஆம்பூர் ஏ. கஸ்பாவைச் சேர்ந்தவர் முரளி (42). வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பஸ்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்திற்கு முரளி சென்றார்.
பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வாணியம்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.
சக போலீசார் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த முரளியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மற்றும் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் ஏட்டு மயங்கி விழுந்து இறந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதியது.
- இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்:
பெங்களூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு வந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலம் மீது இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.
அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் மீது, அரசு பஸ் அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பஸ்களில் இருந்த பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 பஸ்களிலும் பயணம் செய்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பட் ஜான் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் மீட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ்களின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய 64 பேரை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் பலியானார். இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் கடந்து செல்ல வழி இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. விபத்துக்குள்ளான பஸ்களை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஏழுமலை.
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர் நதீம்.
வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் கிளீனர் முகமது பைரோஸ்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த அஜித்.
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா ( 35).
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜி (49) ஆகியோர் பலியாகினர்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த 27 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். லேசான காயமடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் பலர் வாணியம்பாடி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாட சென்ற 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்
- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழையாலும், காற்றாலும் அறுந்து விழும் மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
மின்கம்பம், அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளி, மரங்கள், மின்கம் பங்கள், மின்கம்பிகள் அடியில் செல்லக்கூடாது. கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.
மின்கசிவுகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க உதவும் ஆர்.சி.சி.பி.யை வீடு, கடை, கோவில், பள்ளிகளில் பொருத்த வேண்டும். டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை மின்பாதை அருகில் நிறுத்தி வைக்கக்கூடாது.
கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின்மாற்றி, மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளர் களை தவிர வேறுயாரும் ஏறக்கூடாது.
விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கக்கூ டாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் அருகில் செல்லக்கூடாது. மின்ஒயர் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு அல்லது மின்தடை புகார் மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்
- துரத்திச் சென்று மடக்கி பிடித்தார்
ஆம்பூர்:
ஈரோடு மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 31). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை தேசிய நெடுஞ்சாலையில் காலை கடனை கழிப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
செல்போன் மற்றும் மணிபர்சை லாரியில் வைத்துவிட்டு அருகே உள்ள இடத்திற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். இதனை நோட்டமிட்ட மாங்காய் தோப்பை சேர்ந்த ஆரிப்கான் (32) என்பவர் லாரியில் இருந்த செல்போன் மற்றும் மணி பர்சை திருடினார்.
இதனைக் கண்ட கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து அவரை துரத்திச் சென்று பிடித்தார். மேலும் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆரிப்கானை ஒப்படைத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரிப் கானை கைது செய்து நேற்று இரவு வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவருக்கு இப்ராஹிம், ரியாஸ், பயாஸ், அயாஸ் ,அக்தர், தமிஸ் என 6 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் துணை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்று அப்துல் ரஷீத்தின் பிள்ளைகள் சொத்தின் பத்திரம் குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரஷீதின் மனைவி மற்றும் அவரது மகன்கள் வாணியம்பாடி துணை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை
- ரெயில்வே போலீசார் எச்சரிக்கை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள், சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் வழி யாக செல்லும் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஆபத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண்களை பாது காப்புடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.
அதிவிரைவு ரெயில்கள், விரைவு ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் பயணம் செய்வதாகவும் புகார் இருந்தது.
அதன் பேரில் முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு நடத்தி அதில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள், தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தினர்.
ரெயிலில் சந்தேக படும்படி யாராவது நடந்து கொண்டால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் ரெயிலில் உடன் பயணிக்கும் அடையாளம் தெரியாத பயணிகளிடம் இருந்து உணவு பொருட்கள், தின்பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவர்களை வாங்கி சாப்பிட வேண்டாம். பாதுகாப்பான தீபாவளி அனைவரும் கொண்டாட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.
- தி.மு.க. சார்பில் நடந்தது
- பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி மாணவர் அணியினர் புதுப்பேட்டை சந்தை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ. வடிவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வேளாண் குழு தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சித் பிரதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி அறிவுறுத்தலின் படி ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், நகர துணை செயலாளர் ஆ.சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், நகர பொருளாளர் த.இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சந்தை கோடியூர் பகுதியில் நீட் தேர்வு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வ.வடிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வி.வி.கிரிராஜ், சி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் காளியப்பன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- அதிகாரிகள் உடனிருந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.






