என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

    • வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்
    • துரத்திச் சென்று மடக்கி பிடித்தார்

    ஆம்பூர்:

    ஈரோடு மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 31). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை தேசிய நெடுஞ்சாலையில் காலை கடனை கழிப்பதற்காக லாரியை நிறுத்தினார்.

    செல்போன் மற்றும் மணிபர்சை லாரியில் வைத்துவிட்டு அருகே உள்ள இடத்திற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். இதனை நோட்டமிட்ட மாங்காய் தோப்பை சேர்ந்த ஆரிப்கான் (32) என்பவர் லாரியில் இருந்த செல்போன் மற்றும் மணி பர்சை திருடினார்.

    இதனைக் கண்ட கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து அவரை துரத்திச் சென்று பிடித்தார். மேலும் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆரிப்கானை ஒப்படைத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரிப் கானை கைது செய்து நேற்று இரவு வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×