search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 28 பவுன் நகை கொள்ளை
    X

    கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 28 பவுன் நகை கொள்ளை

    • கண்காணிப்பு கேமராக்களை திருப்பி விட்ட மர்மகும்பல்
    • கதவை உடைத்து துணிகரம்

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 44). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி கனிமொழி. மகள், மகன் உள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான வீடு திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டியில் உள்ளது. இந்த வீட்டை மாமியார் (துளசி 50) என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு துளசி, சந்திரன் வீட்டின் மின் விளக்கை போட்டு விட்டு அவரது வீட்டுக்கு தூங்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை துளசி சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தி இருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வழக்கு பதிவு

    அப்போது அந்த கேமராக்கள் திரும்பிய நிலையில் இருந்தது. கொள்ளையர்கள் தங்கள் முகங்கள் பதிவு ஆகிவிட கூடாது என்பதற்காக கேமராக்களை திருப்பி வைத்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×