என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
    X

    நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

    • தி.மு.க. சார்பில் நடந்தது
    • பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி மாணவர் அணியினர் புதுப்பேட்டை சந்தை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ. வடிவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வேளாண் குழு தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சித் பிரதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×