search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்து கொலை
    X

    கோப்புப்படம்

    முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்து கொலை

    • மனைவி உள்பட 2 பேர் கைது
    • கணவன்- மனைவிக்கு இடையே தகராறு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் யாழரசன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவரது 2-வது மனைவி பிரதீபா (39). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்க ளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாழரசன் பிரதீ பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு பிரதீபா சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் யாழரசன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மனைவி பிரதீபாவிடம் இங்கு ஏன் வந்தாய் என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரதீபாவின் அண்ணன் திருப்பதி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று யாழரசிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது அண்ணன் திருப்பதி ஆகியோர் சேர்ந்து அருகே இருந்த கட்டையை எடுத்து யாழரசனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் யாழரசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் யாழரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீபா மற்றும் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×