என் மலர்
தேனி
- இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
- கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கூடலூர்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1955-ம் ஆண்டு கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அங்கு குடிநீரேற்றுநிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் , உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு வினி யோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக குறைந்த அளவு தண்ணீர் திறக்க ப்படும். அந்த நேரங்களில் கம்பம், கூடலூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோடை காலத்தில் கூடலூர் நகர ப்பகுதிகளில் தடையில்லா குடிநீர் வழங்க கூடலூர் நகராட்சி உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி மற்றும் இயக்குதலும் பராமரித்தலும் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்ப டுத்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குடிநீர்வடிகால்வாரிய உதவிபொறியாளர் ராஜேஷ், கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன் துரை, நகராட்சி ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோரிடம் பொறுப்புக்கான ஆணையை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் கூடலூர் தி.மு.க நகரசெயலாளர் லோகந்துரை, நகராட்சி மேலாளர் ஜெயந்தி, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டம் மூலம் கூடலூர் நகர பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினசரி 52 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனால் கூடலூர் நகர பகுதி மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்படும் என அதிகாரகள் தெரிவித்தனர்.
- பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.
- நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வெள்ளாரம் குன்று பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வண்டிப்பெரியாறு, கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் அனீஸ் தலைமையில் போதை தடுப்பு அலுவலர்கள் பென்னிஜோசப், ராஜ்குமார், கலால் அலுவலர்கள் அனீஸ், சசிகலா, சிபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சமையல் அறையில் இருந்து 2 பிளாஸ்டிக் குடங்களில் வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறல், ஒரு லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.
- பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி அருகே க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்தி ரிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 32 பேர் தலைகாய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும்.
ஆனால் 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் தேனி மருத்துவக்கல்லூரிக்கு வருவதில்லை. வருகை பதிவிற்கான பயோமெட்ரிக் பதிவு செய்வதும் இல்லை என புகார் எழுந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டு தலைக்காய சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களில் பலர் வழியிலேயே உயிரி ழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி மருத்துவத்துறை அதிகாரி கள் கூறுகையில்,
டாக்டர் சந்தான கிருஷ்ணன் தேனி மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முறையாக பணிக்கு வருவதில்லை என பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான பதிலை அளிக்காத அவர் நேரிலும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மீது பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் முறையாக பணியாற்றாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே டாக்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.
- கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.
வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
- வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிலான தார் சாலை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் குறிப்பிட்ட அளவிலான பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க தற்போது வரை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.
இதற்கிடையே கடந்த வாரம் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலை சேதமடைந்த பகுதியில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக வருசநாடு முருக்கோடை இடையே சாலை அதிக அளவில் சேதமடைந்து விட்டதால் ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு குறிப்பிட்ட தொலைவு நடந்த சென்று மீண்டும் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊனத்தை கேலி செய்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சரமாரியாக வெட்டியதால் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே சில்ல மரத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(56). இவர் மாற்றுத்திறனாளி யாவார். அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(39) என்ற வாலிபர் மோகனின் உடல் ஊனத்தை கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மோகன் அவரது உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். மோகன் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டி ச்சாய்த்தார்.
இதில் படு காயமடைந்த ரமேஷ் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் :
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பொட்டிபுரம் திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் பிரியதர்ஷிணி (வயது 16). இவர் போடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நாளை தேர்வு முடிவுகள் வெளி வர உள்ள நிலையில் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்த செல்வம் மகள் எமிமாள் (24). இவர் உத்தம பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமனார். அவரது சகோதரி அன்னை தெரசா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் அந்தோணி சலேத் (33). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மனைவி ரூபினி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.
- பைக்கில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் போலீசார் கைது செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பிஓடிவிட்டனர்.
ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரதீபன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய சதிரேஸ்வரன், அம்மாவாசி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தேனி பைபாஸ் செல்லும் சாலையில் பெண் உள்பட அவரது கணவரும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
- பின்னால் வந்த மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் தாலிச்செயினை பறித்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்தபின்னர் பொழுதுபோக்கு அம்ச ங்களை பார்வையிட்டனர். பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமுளி பைபாசில் இருந்து தேனி பைபாஸ் செல்லும் சாலையில் சென்றபோது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென சுமதியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க தாலிக்கொடியை திருட முயன்றார்.
ஆனால் அவர் நகையை இறுக்க பிடித்துக்கொ ண்டதால் பாதியளவை மட்டும் பறித்துக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
- மாணவி பலியான நிலையில் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை, ஹைவேவிஸ் வனப்பகுதி யில் பெய்யும் மழைநீர் சுருளிஅருவிக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு குளிக்க வந்த சென்னை மாணவி மீது மரக்கிளை முறிந்துவிழுந்து பலி யானார்.
இதனால் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மரக்கிளைகள் அகற்றப்ப ட்டன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினர். கோடைவெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் சுருளிஅருவியில் உற்சா கமாக குளித்து மகிழ்ந்தனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.05 அடியாக உள்ளது. வருகிற 100கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.02 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.05 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.75 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1.6, தேக்கடி 7.4, போடி 5.2, சோத்து ப்பாறை 1.5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
- சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழிலாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுவயதில் பள்ளிக்கு செல்லாத 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபேசி வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச்செல்கின்றனர்.
வறுமையில் உள்ள பெற்றோருக்கு அந்த தொகை மிகப்பெரிய பணமாக தெரிவதால் பலர் தங்கள் குழந்தையை விற்றுவிடுகின்றனர். இதுபோல விற்பனை செய்யப்படும் குழந்தைகள் அவர்களின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்திற்கு செல்லும் குழந்தைகள் அங்கிருந்து தப்பி குற்றசெயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவலமும் நடந்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகில் உள்ள வேலப்பர் கோவில் பகுதியை சேர்ந்த ரவி மகன் தமிழரசன்(14), வேல்முருகன் மகன் ஞானவேல், பட்டவராயன்(17) ஆகிய 3 பேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச்சென்றார். சில மாதங்கள் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பேசி வந்த நிலையில் அதன்பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.
அவர்களது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலைக்கு அழைத்துச்சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த ஏஜென்டிடம் கேட்டபோது அவர்கள் 3 பேரும் ஓட்டலில் திருடிவிட்டனர். அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டோம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதே குற்றம் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் சிறுவர்களை கொத்தடிமையாக வேலைக்கு அழைத்துச்சென்று தற்போது அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு கரட்டு காலனியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது நிலையும் தற்போது என்ன ஆனது என தெரியாமல் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இதுபோன்ற குழந்தை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் மைனர் பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவரும் ஏழை பெற்றோர் வறுமை காரணமாக தங்கள் ஆண்குழந்தைகளை விற்பனைக்காக வெளிமாநிலத்திற்கு விற்று வருகின்றனர்.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை விலை கொடுத்து வாங்கிச்செல்லும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்:
கம்பம் 29-வது வார்டு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த குமார் மனைவி மகேஷ்வரி (வயது 65). கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகள் விஜயலட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார். மகேஸ்வரி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் பார்த்து வந்தார்.
மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






