என் மலர்tooltip icon

    தேனி

    • பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் என முறைகேட்டில் ஈடுபட்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் திருமலாபுரம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் தனியார் காளவாசல் முதல் மாலப்பட்டி வரை வாய்க்கால் சீரமைப்பு மந்தையம்மன் கோவில் முதல் கருப்பத்தேவன்பட்டி, காமாட்சிதேவன் ஓடை வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு வாரம் நடந்தது.

    இப்பணிக்கு வருவோரின் வருகையை பணித்தள பொறுப்பாளர்கள் பால்கண்ணன், கயல்விழி பதிவு செய்தனர். வேலை நடக்கும் நாட்களில் பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவேற்றம் செய்த சில நிமிடங்களுக்குள் அச்செயலியில் முன்னாள் பணித்தள பொறுப்பா ளர்கள் அருள்முருகன், மேனகா செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் எனவும் மோசடியாக பதிவு செய்து பணிக்கு சம்மந்தமில்லாதவர்களின் புகைப்படத்தை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பி.டி.ஓ. மலர்விழி புகாரின்படி சைபர்கிரைம் இன்ஸ்பெ க்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை க்கண்ணன் ஆகி யோர் அருள்முருகன், மேனகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
    • மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது.

    நூற்றாண்டுகள் பழமை யான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்த ப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படு த்தினர்.

    தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    • தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.

    கம்பம்:

    கம்பம் மெட்டு சோதனைச்சாவடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரள மாநிலம் வண்டமேடு பகுதியைச் சேர்ந்த மணி (வயது 53). ராயப்பன்பட்டி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பரமன் (55). ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.

    இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.
    • சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பஸ் நிலையத்துக்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கிறனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ மூலம் பயணிகளை ஏற்றி இறக்கியும் வருகின்றனர். இந்நிலையில் பஸ்நிலை யத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்த னர்.

    எனவே இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது.
    • தேன் வளர்ப்பு பெட்டிகள் தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    சின்னனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மத்திய அரசின் கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மண்டல கோட்ட இயக்குனர் அசோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தேனீக்கள் வளர்ப்பு மற்றும் அவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எவ்வாறு தயாரிப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்ப டுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச ங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்கிடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரை த்தனர்.

    பின்னர் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மானியமாக தேனீ வளர்ப்பு பெட்டிகளை பெற்று வெற்றிகரமாக தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.

    முன்னதாக இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்" என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க ப்பட்டன.

    பின்னர் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் கூறுகையில்,

    தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட தேன் வளர்ப்பு பெட்டிகள் இலவசமாக வழங்கியுள்ள தாகவும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

      பெரியகுளம்:

      தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

      இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

      நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

      தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

      • தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
      • போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      மேலசொக்கநாதபுரம்:

      தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

      இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      • 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
      • லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

      பெரியகுளம்:

      தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

      நாக்அவுட் முறையிலான போட்டிகளில் முடிவு பெற்று நேற்று முதல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

      2-ம் நாள் லீக் சுற்று போட்டியில் முதலில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கும் இந்திய விமானப்படை புதுடில்லி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணி 98க்கு 91 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

      இதனைத் தொடர்ந்து 2-வதாக லீக் சுற்று போட்டியில் கஸ்டம்ஸ் புனே அணிக்கும், பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 77க்கு 74 என்ற புள்ளிகள் அடிப்படையில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

      மேலும் லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

      • கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
      • ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      கூடலூர்:

      கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன .கூடலூர் மெயின் பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் பெரும் பான்மையான இடங்களில் கழிவுநீர் கால்வாய் களை மறித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

      இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது .இதன் காரணமாக கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

      மேலும் சாக்கடை கால்வாயில் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் குளம் போல் தேங்கியது.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் தவித்தனர். எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பஜார் வீதி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

      • சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
      • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

      தேனி:

      தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், தேனி-அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

      மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த மிஷன் லைப் உறுமொழியினை அரசு அலுவலர்கள், பணியாளர்க ள் எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மஞ்சள் பைகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கினார்.

      சுற்றுச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வு க்கும் அச்சுறு த்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது நாம் அனைவரின் முக்கிய பங்காகும்.

      பிளாஸ்டிக் பயன்பாட்டி னைத் தவிர்க்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை கடந்த டிசம்பர் 2021-ல் தொடங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடும் பொருட்டு, பொது மக்களிடையே தொடர்ந்து "மீண்டும் மஞ்சப்பை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

      அதனைத் தொடர்ந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு இறுதி ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

      முகாமில் 15 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணி யிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இறுதி ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 130 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

      • தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
      • இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

      தேனி:

      தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

      தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

      நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

      இந்தநிலையில், இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு படையினர் வந்து மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

      இதுதொடர்பாக தேனி போலீசார் நடத்திய விசாரணையில், வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்றபோது தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

      • கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.
      • துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

      தேனி:

      ஆண்டிபட்டி அருகே வைகை அணை, அரசு தென்னை நாற்று பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

      கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வைகை அணை, அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தேனி மாவட்ட த்தல் விவசாயி களுக்கு தென்னையில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முன்னேற்பாடாக தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரை த்தனர்.

      கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்திடவும், தேங்காய்க்கு உலர்களம் மற்றும் மா விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திடவும், கெங்குவார்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவும், மேகமலை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடவும், பெரியகுளம் சோத்து ப்பாறை அணையில் மீன் வளர்ப்பு செய்திடவும், குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெற ராஜவாய்க்காலில் தடுப்பணை அமைத்து தரவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கு தேவை யான உரம் இருப்பு வைத்திட வும், செங்குளத்துப்பட்டி பகுதியில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட செயல்படாமல் இருக்கும் தொகுப்பு இயந்திரங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் சரி செய்திடவும்,

      மேலும் ஆண்டிபட்டி பகுதியில் காளவாசல் மற்றும் கனிம வளங்கள் அதிகளவில் எடுக்கப்படுவ தால் விவசாய நிலம் மற்றும் விளை பொருட்கள் உற்பத்தி குறைவதால் இதனை தடுத்திட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், முருக மலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார்சாலை மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைத்துதரவும், குப்பைகளை விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவதினை தடுத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வும், ஆண்டிபட்டி கோழி க்காரன் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி வரைபடத்துடன் புலத்தணிக்கை அறிக்கை வழங்கிட வேண்டும்.

      மேலும் கண்டமனூர், புதுக்குளம் தூர்வார வேண்டும், பஞ்சாயத்து கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதினை தடுத்திடவும், ஆண்டிபட்டி பகுதியில் வறட்சி அதிகமாக இருப்ப தால் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரவும், தடுப்பணை அமைத்து தரவும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முருங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையை 6 மாதத்திலிருந்து 1 வருடமாக உயர்த்தி டவும், வெடி வைத்து கனிம வளங்கள் எடுக்கப்படுவதால் போர்வெல் பாதிப்படைவ தாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் இதனை கனிம வளத்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்து தடுத்திடவும், மொட்ட னூத்து, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் கண்மா ய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவ சாயிகள் முன் வைத்தனர்.

      விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்கு மாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

      மேலும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்த தாவது:-

      கோட்ட அளவில் விவசாயிகளுக்கு விவசாயி கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் தாங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தின் எண்களை பதிவு செய்து கொண்டு வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.

      விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் இம்மாத இறுதி க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பதிவு செய்ய இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரி வித்தார்.

      ×