என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிப்பறை"

    • கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்
    • அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. உயரமான பகுதியில் கட்டப்பட்டதால் செப்டிக் டேங்க் கழிவு நீர் சாலையில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுகாதார கழிப்பிட வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் தாழ்வான பகுதியில் புதிதாக செப்டிக் டேங்க் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பின்னர் கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்.

    இதனால் 2 நாட்களில் செப்டிக் டேங்க் மேலே போடப்பட்ட கடப்பாக்கல் உடைந்தது. செப்டிக் டேங்க் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×