என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
போடி அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
Byமாலை மலர்25 May 2023 5:11 AM GMT
- அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்புபடையினர் விரைந்து சென்று 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கருப்பையாவை கைது செய்தனர். போடி மற்றும் மலையடிவார பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X