என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கம்பத்தில் தந்தையின் மதுபழக்கத்தால் மகன் தற்கொலை
- மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற போது மதுஅருந்தி வந்துள்ளார்.
- இதனால் மனஉளைச்சலில் இருந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரோகேஷ்(20), அஸ்வந்த்(19) என 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்போது ஜெயக்குமார் மதுஅருந்தி வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த மகன் ரோகேஷ் தனது தந்தையை கண்டித்துள்ளார். மேலும் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டுக்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
க.விலக்கு அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் வீரபுத்ரன்(70). இவர் தோட்டத்து வீட்டில் தனது மனைவியுடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த வீரபுத்ரன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






