என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கம்பம் அருகே கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 பேர் கைது
- தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.
கம்பம்:
கம்பம் மெட்டு சோதனைச்சாவடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள மாநிலம் வண்டமேடு பகுதியைச் சேர்ந்த மணி (வயது 53). ராயப்பன்பட்டி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பரமன் (55). ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் தொற்று நோய் பரவக்கூடிய கோழி மற்றும் ஆட்டுக்கழிவுகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






