என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதியோர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பேசியதாவது:-
முதியோர்களை பாதுகாக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். அவர்கள் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிராம மக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், பொருளாதார வசதிகள் என நகர்புறத்திற்கு இணையாக மேம்படுத்திக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானிய திட்டத்தில் கடனுதவி வழங்கி மகளிரை பொருளாதார முன்னேற்றம் அடைய செய்தார். அந்த வழியில் தற்போது மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை மகளிர் நலனுக்காக செய்து வருகிறார். அதில் குறிப்பாக ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இருந்த 100 நாள் 150 நாட்களாக உயர்த்தி உள்ளார்.
பெண்கள் இட ஒதுக்கீட்டை 35 சதவீதமாக உயர்த்தியவர் கருணாநிதி, அதை தற்போது 40 சதவீதமாக உயர்த்தி உள்ளார் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு உதவும் பொருட்டு சமூக நலத்துறை சார்பில் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட்டு முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காலங்களில் அவர்களுக்கு முறையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாட்டுப்போட்டி, நாடக போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ட்ரூபா முதியோர் இல்ல இயக்குனர் மைக்கேல் அன்னராஜ், சித்தா மருத்துவர் பிரபாகரன், தாசில்தார் பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டதால் அவர்களது இயக்கத்தில் காளிதாஸ் சேர்ந்தார்.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்தனர். தற்போது அவர் கேரளாவில் சிறையில் உள்ளார்.
அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
சிவகங்கையில் காளிதாசின் சகோதரர் சிங்காரம் வசிப்பது தெரியவந்தது. அங்கு இன்று காலை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 2 அதிகாரிகள் சிவகங்கை வந்தனர். அவர்கள் சிவகங்கை போலீசார் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. வீட்டிற்கு வெளியே நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடை பெற்று வருகிறது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை ஈயோலிவயலை சேர்ந்த கணேசன் மகன் சக்தி (வயது29).
நேற்று மாலை இவர் ஜீவா நகர் நாடகமேடை அருகே இருசக்கர வாகனத்தில் தேவகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை சிதம்பர நாதபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் வன்மீக நாதன் (31) வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் அரிவாளை எடுத்து சக்தியை வெட்ட முயன்றபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதில் அருகில் நின்று கொண்டிருந்த வன்மீக நாதனின் நண்பர் ஆனையடி வயலை சேர்ந்த சுரேசுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை நகர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று வன்மீக நாதனை கைது செய்தார்.அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை கண்ணன்கோட்டை அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு வன்மீகநாதன் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது குடிக்க சென்றார்.
அப்போது அங்கு வந்த சக்திக்கும், வன்மீக நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை நினைத்து வன்மீகநாதன் அதிக அளவில் மது குடித்து வந்தார். மேலும் சக்தியை கொலை செய்யும் நோக்கத்தோடு அரிவாளை எடுத்துக் கொண்டு நேற்று சென்றார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி தப்பினார்.
வன்மீநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதே டாஸ்மாக் கடையில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் மது அருந்த வரும் நபர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேவகோட்டை நகர் காவல் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் போலீசார் குறைந்த அளவே பணியில் உள்ளனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க அவர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து காவலர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






