என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்13 Oct 2021 10:08 AM GMT (Updated: 13 Oct 2021 10:08 AM GMT)
சிவகங்கை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா (22) என்ற பெண்ணை கடந்த 8 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். பிரதீபா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்தநிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவரை மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துசென்று மருத்துவ சிகிச்சை அளித்தார். ஆனால் சிசிக்சை பலனின்றி பிரதீபா கடந்த 10-ந் தேதி இறந்தார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்த பிரசாத் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான்வயலை சேர்ந்தவர் ஜான் அசோக் (31). வேன் டிரைவர். இவருக்கும் ஜெயசெல்விக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். ஜான் அசோக் குடித்து விட்டு வருவதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெயசெல்வி கோபத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த ஜான் அசோக் வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X