என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.
தேவகோட்டை
சிவகங்கையில் செயல் பட்டு வரும் தனியார் பள்ளியில் சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை தாயமங்கலத்தில் இருந்து பள்ளி வாகனம் வந்துள்ளது.
இந்த வாகனம் தாயமங்கலம், சாத்திரசன்கோட்டை பகுதியில் 22 மாணவ-மா ணவிகளை ஏற்றிக்கொண்டு வேலாங்குளம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வேலான்குளம் கிராமத்தினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் 10 பேர் சாத்திரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளி வாகனம் தாமதமாக வந்ததாகவும், ஓட்டுநர் வேகமாக இயக்கியதும், பள்ளி வாகனத்தில் உதவியாளர் யாரும் இல்லாததும், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- கீழடி 18 சித்தர்கள் கோவிலில் மண்டலபூஜை நடந்தது.
- மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடி கிராமத்தில் 18 சித்தர்கள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதை தொடர்ந்து 48-ம் நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. 18 சித்தர்களுக்கு தனிசன்னதியில் புனிநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், தண்டாயுதபாணி, கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி, பாலாம்பிகை, அகத்தியருக்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை-மதுரை மாவட்ட எல்லையில் கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகள்உள்ளன. இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறைமூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் முக்கிய திட்டமாக இங்கு கிடைத்த பொருட்களை கொண்டு பிரமாண்ட கட்டிடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் செட்டிநாடு கட்டிடகலையில் மிகப்பெரிய அகழ்வா ராய்ச்சி காப்பக அரங்கம், கல்மண்டபங்கள், கூடங்கள், குளம் போன்றவை கலை நயத்துடன் அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.
இந்த பணிகளை இறுதி ஆய்வு செய்யும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடியில் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தருகிறார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
கீழடி அகழாய்வு பணியில் கிடைத்த தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாகவும் அந்த பொருட்களை உலகத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ11.03கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டி டம் கட்டுமான பணிகள் நடந்தது.
தமிழர்களின் சங்க கால தமிழர்களின் பெருமை களை பறைசாற்றுகின்ற வகையில் உலக அளவில் புகழ்பெற்றுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வளாகத்தில் நடை பெற்ற விவரம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார்.
வருகிற மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங் கெற்க உள்ளார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை கோட்டாச்சியர் சுகிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.
ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.
தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- பாரம்பரியமிக்க முண்டு மிளகாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
- இது ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரம்பரியமிக்க பொருட்களின் சிறப்புக்கு ஏற்ப புவிசாா் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டு இருந்தது. இந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகு ளத்தூா், பரமக்குடி, நயினாா் கோவில், ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய், வேலூா் மாவட்டத்தில் விளையும் முள்கத்தரிக்காய் ஆகியவற்றுக்கு புவிசாா் குறியீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு மொத்தம் 45 பொருட்களுக்கு புவிசாா் குறியீடு பெற்று, இந்திய அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. 200 ஆண்டுகளாக ராமநாதபுரம் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் குண்டு மிளகாய்க்கு அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இங்கு விளையும் குண்டு மிளகாயை விவசாயிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி, கத்தாா், ஓமன், துபாய், சவூதி அரேபியா, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனா். இது ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபாலபுரம் அருகே வளைவில் வந்தபோது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவே கம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் கண்முன்பு தந்தை விபத்தில் பலியான சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
இந்திய ராணுவத்தில் (Agniveer) திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்ப முள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இளை ஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக 15.3.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
- வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், அமுதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுபதி, கணேசன், மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ரூ.10.50 கோடியில் பிரசவ சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
- ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:-
சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சராசரியாக மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் மருத்துவக் கட்டிடம் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கென நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது.
இதுதவிர அனைத்து நகர்ப்புறப்பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிப் பகுதி களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.1.25கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்காக பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப்ப டவும் நடவடிக்கை கள் எடுக்க ப்பட்டுள்ளது.
துணை சுகாதார நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மானாமதுரை ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) தர்மர், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன்(சுகாதாரப்பணிகள்), யோகவதி (குடும்ப நலம்), கவிதாராணி (தொழுநோய்), ராஜசேகரன் (காச நோய்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), சரவணமெய்யப்பன் (கண்ணங்குடி) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
- சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர் அ.தி.மு.க.வில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சி பணியோடு சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் முனைப்பு காட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் ஈட்டும் வருமானத்தை கட்சி பணிக்கு அப்பாற்பட்டு கோவில் கட்டுதல், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுத்தல், ஏழை-எளிய மக்களுக்கு திருமண உதவி செய்தல் போன்ற பல்வேறு அறப்பணிகளில் முழுமையாக அர்ப்பணிக்கும் மனிதராகவும் இருந்து வருகிறார்.
கொரோனா நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களின் ஒவ்வொ ருவரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அவர்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.
இவரின் இத்தகைய செயல் இந்த பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கட்சி மேலிடத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் பொன்மணி பாஸ்கரன் மெல்ல மெல்ல அசுர வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்து தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட பேரவை துணைச் செயலா ளராகவும்பதவி வகித்து வருகிறார்.
இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள திருமண மகாலில் மகள் ஹரிப்பிரியா-ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நடந்தது. அதனுடைய வரவேற்பு விழாவை, தான் பிறந்த ஊரில் வைக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.
அதற்காக பிரமா ண்டமாக ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்டம் குன்னத்தூரில் அருகே உள்ள ஓ.வி.எம். கார்டனில் நடந்தது.
வரவேற்பு விழாவில் முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
திருமண வரவேற்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்கள் சார்பில் சீர் செய்யும் விழா நடத்தினர். சுமார் 504 ஆட்டுக்கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை குன்னத்தூர் கண்மாய் கரை சாலை நெடுகிலும் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் திருமண வரவேற்பு பந்தலுக்கு கொண்டு வந்தனர்.
சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.
விழாக்கோலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் சீர் எடுத்து வந்தது காண்போர் மத்தியில் ஆனந்தத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.
- காரைக்குடியில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கலந்துகொண்ட கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் பேசும்ேபாது, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றியோ, பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றியோ சிவில் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தீர்ப்பு வழஙகியுள்ளது. இவ்வளவு நாள் மலர்பாதையில் நடந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் இனி சிங்கப்பாதையில் செல்வார் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி துணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாலர் மாத்தூர் பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், அம்மா பேரவை ரவி, நகர துணை செயலாளர் கணேசன், நகர பொருளாளர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு சகுபர் ஜாவித், சேக், மாவட்ட ஐ.டி. விங்க் இணை செயலாளர் கார்த்தீஸ்வரன், மகளிரணி காளீஸ்வரி, ரேவதி, ராமாமிர்தம், மாலதி, பத்மா, தேவி உமையாள், இளைஞரணி பாலமுருகன், பாசறை கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
மானாமதுரை வட்டார அளவிலான 21 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 140 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு இனறு (25-ந்தேதி) நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த 6,695 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அந்தந்த மாணவர்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு சார்பில் கல்வி உத வித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் மானாமதுரை வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவர்க ளை அதிக அளவில் தேர்ச்சி பெற வைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆலோ சனைப்படி மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த வாரம் 3 நாட்களும், இந்த வாரம் 3 நாட்களும் என மொத்தம் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மாதிரி தேர்வு நடந்தது. இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர். 7 வகுப்பறைகளில் கண்கா ணிப்பாளர்களைக் கொண்டு முறையான தேர்வு போன்று மாதிரி தேர்வு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா பார்வையிட்டனர்.கருத்தாளர்கள் சிவகுருநாதன், ஜெப மாலை வளனரசு, நாகராஜன், எட்வின்பால், கற்பகவள்ளி, மேரிஐரீன், நிர்மலா, ராஜரீக மேரி ஆகியோர் பயிற்சி அளித்து தேர்வுகளை நடத்தினர்.
தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு பிற்பகலில் பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக தேர்வு எழுதிய 10 மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.






