search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழடி 18 சித்தர்கள் கோவிலில் மண்டலபூஜை
    X

    கீழடி 18 சித்தர்கள் கோவிலில் மண்டலபூஜை

    • கீழடி 18 சித்தர்கள் கோவிலில் மண்டலபூஜை நடந்தது.
    • மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடி கிராமத்தில் 18 சித்தர்கள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதை தொடர்ந்து 48-ம் நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. 18 சித்தர்களுக்கு தனிசன்னதியில் புனிநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், தண்டாயுதபாணி, கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி, பாலாம்பிகை, அகத்தியருக்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×